ஆதரவற்று இறந்த இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியப் பெண்கள்
தென்காசியில் ஆதரவற்று இறந்த இந்து பெண்ணின் உடலை இஸ்லாமிய பெண்கள் தகனம் செய்த சம்பவம் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நிகழ்வதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் பசியில்லா தமிழகம் மூலமாக பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் ஆதர வற்ற முதியவர்களுக்கான கட்டண மில்லாத இல்லம், அன்னை பாத்திமா அலி அன்பு இல்லம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அன்பு இல்லத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஆதரவற்ற பெண்கள் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து பராம ரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த இல்லத்தில் உணவு, உடை, இருப்பி டம், மருத்துவம் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வரு கிறது. கடந்த 11.6.2024 அன்று தென்காசி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கள் மூலமாக, செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுரு கன் அனுமதியுடன் மகமாயி என்ற மூதாட்டி மிகவும் உடல் நிலை மோச மான நிலைமையில் அனுமதிக்கப் பட்டார். அன்பு இல்லத்தில் முதலுதவி கள் செய்து தொடர்ந்து 8 மாதமாக அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வந்தார். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அன்பு இல்லத்தைச் சார்ந்த நிர்வாகிகள் ஏற் படுத்திக் கொடுத்தனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், வயது முதிர்வின் காரணத்தினாலும் 8.4.2025 அன்று மகமாயி மரணடைந்தார். உடனடியாக அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று, அவரது உறவினர்க ளை வரவழைத்து அவரது உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகமாயி பாட்டிக்கு அன்பு இல்லத்தில் அனைத்து இறுதிச் சடங்குகளும் முடித்து புத்தாடை அணிவித்து, முதி யோர் இல்லத்தில் உள்ள முதியவர் கள் அனைவரும் இணைந்து மௌன அஞ்சலி செலுத்தி, மாலை மரியாதை யுடன் அவரது உடல் தென்காசி மின் மயானத்தில் அவரது உறவினர்கள் முன் னிலையில் தகனம் செய்யப்பட்டது. இஸ்லாமிய பெண்களால் நடத்தப் படும் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் சாதி மத பேதமின்றி அனைத்து ஆதரவற்ற வயது முதிர்ந்த பெண்களும் தொடர்ந்து பராமரிக் கப்பட்டு வருகிறார்கள். இஸ்லாமிய பெண்களாக இருந்தாலும் மகமாயி பாட்டியின் உறவினர்கள் முன்னிலை யில் இந்து முறைப்படி தகனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த னர். நடு இரவு வரை மின்மயானத்தில் நின்று ஏற்பாடு செய்து கொடுத்த ஜமீமா ஜின்னா மற்றும் செய்யது அலி பாத்திமா ஆகியோருக்கு இறந்த மகமாயியின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறி விடை பெற்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக ஒற்றுமைக்கும் மனித நேயத்துக்கும் எடுத்துக்காட்டாக செயல்பட்டு வரும் இஸ்லாமிய பெண்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.