tamilnadu

img

கவச உடை அணிந்து எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்

சென்னை.ஜன.12- கொரோனா காலத்தில் அரசு மருத் துவமனைகளில் ஒப்பந்த செவிலி யர்கள் சுகாதாரத்துறை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப் பட்டனர்.  கடந்த டிசம்பர் மாதம் அவர்களது ஒப்பந்த காலம் முடிவுற்றதாக அரசு அறி வித்தது. தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த செவி லியர்கள் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டு போராடி  வருகிறார்கள். அவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைமை செயலகத்தை வியாழனன்று முற்றுகையிடும் போராட்டத்தை எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்து இருந்தனர். இதற்காக எழும்பூரில் அவர்கள் திரண்டனர்.  கொரோனா உடை அணிந்து செவி லியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அங்கிருந்து கோட்டை நோக்கி  ஊர்வல கமாக புறப்பட முயன்றனர். ஆனால் அவர்களை முன்னேற விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.