புதுதில்லி, அக். 28 - வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழு (JPC)கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல லட்சம் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களைச் சூறையாடும் வகையில், ஒன்றிய பாஜக அரசு, வக்பு சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. இந்து அற நிலையத் துறை வாரியங்களில் முஸ்லிம் களையோ, கிறிஸ்தவர்களையோ உறுப்பினராக நியமிக்க முடியாது எனும் போது, வக்பு வாரியங்களில் மட்டும் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பது, வக்பு தலைவராக ஒன்றிய அமைச்சரை நியமிப்பது என 44 திருத்தங்களை ஏற்படுத்தியது. “இது நமது அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கும் மத வழிபாடு சுதந்திரத்தை மீறுவது; நமது அர சியலமைப்பு சட்டத்தின் 25, 26, 27 மற்றும் 28 ஆகிய பிரிவுகளுக்கும் முர ணானது; இதனைக் கொண்டு வரு வதற்கு முன்பு மாநில அரசாங்கங் களோடோ அல்லது முஸ்லீம் அமைப்புகளோடோ கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்பதால், இந்தச் சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்பட வேண்டும். அல்லது பரவ லான கலந்தாலோசிப்புக்காக தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்” என்று கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து, மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெக தாம்பிகா பால் தலைமையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. ஆனால், இந்தக் குழுவில் எதிர்க் கட்சி எம்.பி.க்களின் கருத்துக் களை கேட்பதோ, பொருட்படுத்து வதோ இல்லை என்பதுடன், தங்களின் விருப்பத்தை செயல்படுத்துவதி லேயே பாஜக எம்.பி.க்கள் உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு முறையாகப் பதிலளிக்காமல், பாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய் கிண்டல் அடித்ததன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.
கோபத்தில் கல்யாண் பானர்ஜி அரு கிலிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததில், அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இந்நிலையில், திங்களன்றும் (அக். 28) வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டம், புதுதில்லியில் நடைபெற்றது. முன்னதாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் தில்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார், குழுவின் தலைவரிடம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். பின்னர் அந்த அறிக்கை அனைவருக்கும் பகிரப் பட்டது. அதில், ‘தில்லி வக்பு வாரி யத்தின் ஆரம்ப அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருந்த பல்வேறு அம்சங் கள், அஸ்வினி குமாரின் அறிக்கை யில் இல்லை. தில்லி அரசுக்குத் தெரி யாமல் இந்த மாற்றங்கள் செய்யப் பட்டிருந்தன. இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்ததும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். மேலும், இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங், திமுக- வின் முகமது அப்துல்லா, காங்கிர ஸின் நசீர் உசேன், முகமது ஜாவேத், சமாஜ்வாதி கட்சியின் மொஹிபுல்லா நட்வி உள்ளிட்ட எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.