tamilnadu

img

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சசிகாந்த் செந்தில் எம்பி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து  சசிகாந்த் செந்தில் எம்பி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்

திருவள்ளூர், ஆக.29- தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகை யை ஒன்றிய அரசு வழங்கும் வரை  உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அறிவித்து   போராட்டத்தை வெள்ளியன்று (ஆக 29), காலை தொடங்கினார்.  இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.திருவள்ளூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில்  சசி காந்த் செந்தில் எம்பி செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.  நியாயமாக தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கொடுக்காமல் புதிய கல்விக்கொள்கை, அதன் மூலம் மும்மொழி கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க ஒன்றிய பாஜக அரசு முயல்வதாகவும், இதனால்  மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கும் பாஜக அரசு, குழந்தைகளை பகடைகாய்களாக நினைப்பதாகவும், இந்த பிரச்சனை கள் குறித்து நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பேசி வரு வதாகவும், தனிநபர் தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது. நாடாளு மன்றத்தில் 377 விதி-இன் கீழ் மற்றும் நாடாளுமன்ற பூஜ்ஜிய நேரத்திலும் கேள்வி எழுப்ப முயன்றதாகவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தனது அலுவலகத்தில் இந்தப் போராட்டம் நடை பெறுவதாகவும், ஒன்றிய அரசு  நிதி வழங்கும் வரை  போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தது  திரு வள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.