சிதம்பரம்,அக்.15- சிதம்பரத்தில் இருசக்கர வாக னத்தில் கூடுதலாக குழந்தைகளை அழைத்து வந்ததாகக் கூறி தம்பதி யருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய தாக சிறப்பு எஸ்.ஐயும் காவலரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள னர்.
கடந்த 13 ஆம் தேதி சிதம்பரம் நகர சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகனும் காவலர் சார்லசும் கஞ்சித் தொட்டி முனையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியை மடக்கி, இருசக்கர வாகனத்தில் இரு வர்தான் வரவேண்டும், நான்கு பேர் வந்தது ஏன் என்றும் அசல் ஆவணங்க ளைக் கேட்டும் அபராதம் விதித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்தக் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி கடுமையான விமர் சனத்துக்கு உள்ளானதை அடுத்து சிறப்பு எஸ்.ஐயையும், காவலரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி அபினவ் உத்தரவிட்டுள்ளார்.