மதுரை, ஜூன் 30- மேலவளவு தியாகிகள் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேரின் 22-ஆவது ஆண்டு நினைவுதினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. மதுரை மேலூர் தாலுகா மேல வளவில் உள்ள தியாகிகள் நினை விடத்தில் மதுரை மக்களவை உறுப்பின ரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.நன்மாறன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜய ராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், வீ.அடக்கிவீரணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநி லச் செயலாளர் த.செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர் ம.பால சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வ அரசு நன்றி கூறினார்.