ஒன்றிய - மாநில உறவுகளை மோடி மோசமாக்கி விட்டார்!
சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றச்சாட்டு
ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடை யிலான உறவுகளை, மோடி தலைமையி லான பாஜக அரசு மோசமாக்கி விட்ட தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார். “வலுவான இந்தியா, திடமான மாநிலங்கள்” என்ற அடிப்படை தொலைநோக்குப் பார்வையை ஒன்றிய அரசு மீறுகிறது என்றும் விமர்சித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், தமது சொந்த மாவட்டமான கொல்லத்தில் பத்திரிகை யாளர் மன்றம் நடத்திய சந்திப்பில் எம்.ஏ. பேபி கலந்து கொண்டார். அப்போது, தம்மிடம் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு எம்.ஏ. பேபி பதிலளித்தார். அப்போது, “மக்கள் விரோத செயல் களுக்கு மோடி அரசாங்கம் வகுப்பு வாதத்தை ஒரு மூடுதிரையாகப் பயன்படுத்துகிறது” என குற்றம் சாட்டிய எம்.ஏ. பேபி, “ஒன்றிய அரசு அதி காரத்தை கண்மூடித்தனமாக பயன் படுத்துவது, பிரிவினைவாத இயக்கங்களுக்கே உதவும்” என்றார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகி யவை, பல்வேறு சாதிக்குழுக்களை அவர்களின் அடையாள உணர்வின் அடிப்படையில் திரட்டி, இந்துத்துவா அடையாளத்தை நோக்கி கொண்டு வரு வதாகவும் தெரிவித்தார். “சாதியும், மதமும் உணர்வுகளை விரைவாகத் தூண்டிவிடும் என்பதை ஆர்எஸ்எஸ் நன்கு அறிந்திருக்கிறது. வகுப்புவாதத்தைத் தூண்டுவது மக்க ளின் கவனத்தை நிஜ வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பும் என்று பாஜக நம்புகிறது. இதை சில அரசியல் கட்சிகள் புரிந்து கொள்வ தாக இல்லை. பிரதமர் மோடியின் கருத்துப்படி, மின்சாரம் மற்றும் வரி வருவாய் ஒன்றிய அரசுக்கு மட்டுமே என்பதன் மூலம், மாநிலங்களின் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்களை ஒன்றிய அரசு ஆக்கிரமித்து வருகிறது. இது கூட்டாட்சிக் கொள்கைகளையும் மீறு கிறது. வகுப்புவாதத்தை முறியடிக்கும் பணியில் காங்கிரசுக்கு பெரும்பங்கு உண்டு. இருப்பினும், காங்கிரஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தயாராக இல்லை” என்று எம்.ஏ. பேபி குறிப்பிட்டார்.