மயிலாடுதுறையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
மயிலாடுதுறை, மார்ச் 13- மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டக் குழு அலு வலக கட்டிடம் கட்டுவதற் கான நிதியளிப்பு பொதுக் கூட்டத்திற்கு திங்களன்று வருகைதந்த கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.இராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் துறை வாரி நிதி ஒதுக்கீடு தொடர் பாக திங்களன்று துவங்கிய கூட்டத்தில் ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையின்படி அதானி நிறுவனம் மோசடி குறித்து நாடாளுமன்ற கூட் டுக்குழு அமைத்து விசாரிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத் தின. ஆனால், இதற்கு ஆளும் பாஜக அரசு அனுமதி மறுத்து, கடும் அமளியோடு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானியை பாதுகாப்ப தற்காகவே பாஜக அரசு இது போன்று நடந்து வருகிறது. பாஜக ஆளாத மாநி லங்களில் அரசை கவிழ்ப்ப தற்கும், சீர்குலைக்கவும் ஒன் றிய அரசு பல்வேறு முயற்சி களை ஆளுநர் மூலம் மேற் கொண்டு வருகிறது. தமிழ் நாட்டில் ஆளுநர் இதுவரை 21 மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிக்கவில்லை.
ஆன்-லைன் சூதாட் டத்தை தடை செய்யும் அவ சர சட்டத்தில் கையெழுத் திட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதன் மசோதா வை திருப்பி அனுப்பி உள் ளார். இரண்டு ஆண்டுகளில் இதுவரை 44 பேர் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற் கொலை செய்து கொண் டுள்ளனர். ஆனால், ஆளு நருக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்த வர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல் சூதாட்டத்தை நடத்துகின்ற வர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தி மசோதா வை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்புகிறார். திருச்சி குமர வயலூர் முருகன் கோயிலில் பிரா மணர் அல்லாத இரண்டு அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. இதனை ஆகம விதிக்கு எதி ரானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய் துள்ளது.
இதை எதிர்த்து தமி ழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். சுங்கச்சாவடி கட்ட ணத்தை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக ஆக உயர்த் தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள காலாவதி யான 32 டோல்கேட்டில் பணம் வசூல் செய்யப்படு வதை தடுத்து காலாவதி யான டோல்கேட்டுகளை உட னடியாக மூட வேண்டும். இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்தமான கோயில் இடங்களில் குடி யிருப்போர் மற்றும் குத்தகை விவசாயம் செய்பவர்கள், அந்த இடங்களில் கடை வைத்து தொழில் செய்பவர் கள் நலனை பாதிக்கும் வகை யில் அரசு செயல்படக் கூடாது. கோயில் இடத்தில் உள்ள கடைகளில் பகுதி கட்டுவதை வாடகையாக மாற்றி, கடந்த பல ஆண்டு களாக நிலுவையில் உள்ள தொகையை செலுத்தச் சொல்வது சரியான முறை அல்ல. இதனை விசாரித்து வரும் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்” என்றார். செய்தியாளர் சந்திப்பின் போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், டி. சிம்சன், சி.விஜயகாந்த், நகர பொறுப்புச் செயலாளர் சி. விஜயகாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.