tamilnadu

img

மோடியும் எடப்பாடியும் ஒன்றே!

மோடியின் ஆட்சி மீண்டும் வருவதற்கு வாய்ப்பு கிடைக்குமென்றால் முதன்முதலில் அதை ஆதரிக்கிறவர்  எடப்பாடி பழனிச்சாமியாக தான் இருப்பார். ஆகவே பழனிச்சாமிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் மோடிக்கு போடுகிற வாக்கு. மோடிக்கு போடுகிற வாக்கு பழனிச்சாமிக்கு போடுகிற வாக்கு.  ஆனால் இன்று தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தைரியமாகவும், துணிச்சலாகவும் ஒன்றிய அரசிடம் உரிமைகளை கேட்கிற அரசாக உள்ளது. இந்த அரசை ஆதரிப்பதற்காக தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது ஒரே நாளில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஒரு ஒப்பந்தம் கச்சத்தீவு. மற்றொரு ஒப்பந்தம் என்பது கன்னியாகுமரியிலிருந்து 70 கிலோ மீட்டர்  அருகில் மெட்ஜ் பேங்க் என்ற 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடத்தை மீன்வளமும், பெட்ரோலிய வளமும் உள்ள இடத்தை இலங்கையின் ஆளுகையிலிருந்து நாம் பெற்றிருக்கிறோம்.  இருந்தாலும் கச்சத்தீவை மீண்டும் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குழித்துறையில் செய்தியாளர்களிடம் பீட்டர் அல்போன்ஸ் பேசியதிலிருந்து