விருதுநகர், ஆக.19 - விருதுநகர் தெற்கு ஒன்றியம் ஆவு டையாபுரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் ‘இந்திய சுதந்திரமும் மதச்சார்பின்மையும்’ என்ற தலைப்பில் திறந்த வெளி கருத்தரங்கமும் உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது. ஊர் திருவிழா போல் நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வ சமயத்தினரும் எழுச்சியுடன் நூற்றுக்கணக்கில் பங்கேற் றனர். இந்நிகழ்விற்கு ஆவுடையாபுரம் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எஸ். மைதீன் காட்டுவா தலைமை வகித்தார். சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலச் செயலாளர் எம்.தாமஸ் சேவியர் தொடக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ்.கே.இராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஏ.மரிய டேவிட், மாவட்டத் துணைத் தலைவர் ஜெ.ஜே. சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.ஆரோக்கியராஜ், ஆவுடையாபுரம் ஜூம்மா பள்ளிவாசல் இமாம் எம்.முக மது நஷீர் ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் துணைத் தலைவர் ஜனாப் ஹாஜி மூசா சிறப்புரையாற்றினார். விடுதலைப் போராட்டத்தில் இஸ்லா மியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தி னரின் பங்கு, அவர்களின் தியாகங்கள் குறித்தும், முற்போக்கு மரபுகள் குறித்தும் ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள வஃக்பு வாரிய திருத்த மசோ தாவின் உள்நோக்கங்கள் குறித்தும் பேசிய அவரது உரைக்கு ஊர் பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. முன்னதாக பி.நேரு முன்னெ டுப்பில், தேச ஒற்றுமை குறித்து மன்னார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலர் பூங்கா குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாஅத் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர் எம். நல்ல முஹமது, காஜா ஏஜென்சி உரிமை யாளர் எஸ்.லியாகத் அலி, எம்.அப்துல் வஹாப், எஸ்.மைதீன்காட்டூவா, எஸ்.அப்துல் ரஹ்மான், விருதுநகர் கல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். ஜெயிலானி, சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட நிர்வாகிகள் இ.ஜெயா, எம்.நாகூர் மீரான், ஏ.பாக்கியராஜ், அ. இராமு, எம்.சரஸ்வதி, ஜி.மனோகரன், ஜெ.ஜோசப் கஸ்பர்கனி, மஃபுல் ஜான், ஆர்.முருகேஸ்வரி, சிபிஎம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.