விருதுநகர், ஜூன் 2- விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்ச ரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1674.55 லட்சம் மதிப்பீட்டில் 40 கண்மாய்கள் விவ சாயிகளின் பங்களிப்போடு புனரமைக்கப் படவுள்ளது. கீழ் வைப்பாறு வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட சிவகாசி வட்டம், ஈஞ் சார் நடுவப்பட்டி கண்மாய், புதுக்கோட்டை பெரியகுளம் கண்மாய் ஆகியவற்றில் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: நீர்வள ஆதாரத்துறையின் மூலம் இராஜபாளை யம் மேல்வைப்பாறு வடிநிலக் கோட்டப் பகுதியில் ரூ.718.05 லட்சம் மதிப்பீட்டில் 22 பணிகள், மதுரை குண்டாறு வடிநிலக் கோட்டம் காரியாபட்டி உபகோட்ட பகுதி யில் ரூ.624.50 லட்சம் மதிப்பீட்டில் 10 பணி கள், விருதுநகர் வைப்பாறு வடிநில கோட்டப் பகுதியில்; ரூ..332 லட்சம் மதிப் பீட்டில் எட்டுப் பணிகள் என மொத்தம் 40 பணிகள் ரூ.1674.55 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ளது.
இதில், கண்மாய் கரைகளை பலப் படுத்துதல், மடைகள் பழுதுபார்த்தல், மறுகட்டுமானம் கலுங்குகளை பழுது பார்த்தல், வரத்துக்கால்வாய்கள் தூர் வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவை செய்து கண்மாய்களில் எல்லை கற்களை நடுதல், சீமைக் கருவேல் முட் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் குடிமராமத்துப் பணிகளாக மேற்கொள் ளப்படவுள்ளது. 5187.07 ஹெக்டேர் பாசன விளைநிலங்கள் பயன்பெறும் என தெரி வித்தார். நிகழ்வில் சார் ஆட்சியர் (சிவகாசி) தினேஷ்குமார், செயற்பொறியாளர் (வைப் பாறு வடிநிலக்கோட்டம்) குருசாமி, மாவட்ட ஊராட்சித்தலைவர் வசந்தி, துணைத்தலை வர் சுபாஷினி, சிவகாசி வட்டாட்சியர் வெங்க டேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.