மயிலாடுதுறை, நவ.13- மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், மீட்பு பணி களையும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச் சாலை மற்றும் ஊழல்தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் ஞாயிறன்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சீர்காழி வட்டம், மணிக்கிராமத்தில் குடிசை வீடுகள் மழை நீரில் மூழ்கியதை கணக்கெடுக்கும் பணிகளையும், சாலை களில் விழுந்த மரங்களை அகற்றும் பணி களையும், பாபுஜி நகரில் மின் கம்பங்கள், மின்கம்பிகள் சீரமைக்கும் பணிகளையும், சின்னப்பெருந்தோட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முகாமில் தங்கியுள்ள மக்களுக்காக உணவு சமைக்கும் கூடத்தி னையும் ஆய்வு செய்தனர்.
பின்னர், திருவெண்காடு சாமிநகர், கற்பகம் நகர் ஆகிய பகுதிகளில் சாலை களில் தேங்கி கிடந்த மழை நீரை பம்புசெட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை யும், திருவெண்காடு மெயின் ரோட்டில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பங் களையும், மின்கப்பிகளையும் மின்வாரிய ஊழியர்கள் மூலம் மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், எடமணல் துணை மின் நிலையத்தில் சாய்ந்து கிடந்த மின்கம்பிகளை ஊழியர்கள் மற்றும் பணி யாளர்கள் மூலம் மறு சீரமைக்கும் போன்ற பல்வேறு பணிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். எடமணல் துணை மின் நிலையத்தில் மின்கம்பிகள் மறு சீரமைக்கும் பணி யினை ஆய்வு செய்தபின், மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
“கடந்த சில தினங்களுக்கு முன்பு வட கிழக்கு பருவமழை வரலாறு காணாத அள வில் பெய்துள்ளது. அதுவும் குறிப்பாக மயி லாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 43 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மழையால், 10 துணை மின் நிலையங்கள் சேதமடைந் துள்ளன. குறிப்பாக எடமணல் துணை மின் நிலையம் மிக அதிகளவில் சேதமடைந்துள் ளது. அதனை சீர்செய்யும் பணி மின்வாரிய ஊழியர்கள் மூலம் போர்கால அடிப்படை யில் நடைபெற்று வருகின்றன. 2260 மின் மாற்றிகள் சேதமடைந்துள் ளன. அதில் 1984 மின்மாற்றிகள் சரிசெய்யப் பட்டு, சீரான மின் விநியோகம் வழங்கப்படு கிறது. 370 மின்மாற்றிகள் மிகவும் சேதம டைந்துள்ளன. அதில் 163 மின்மாற்றிகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. 200 மின் கம்பங்கள் உடைந்துள்ளன. இதில் 120 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 80 மின்மாற்றிகள் ஞாயிறன்று சரி செய்யப்பட்டு, அனைத்து பகுதிகளி லும் சீரான மின் விநியோகம் வழங்கப் படும். திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 354 மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சீர மைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.” இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறுகையில், “சீர்காழியில் நிறைய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சீர்காழி யில் 10.000 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. செம்பனார்கோயிலில் 10250 ஹெக்டேர் நெற்பயிர்கள் என மொத்தம் 34,852 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. 15,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள் ளது. வீடுகளில் சூழ்ந்த மழைநீரை பம்பு செட்டு மோட்டார் மூலம் வெளியேற்றப் படுகிறது. வீடு மற்றும் முகாம்களில் உள்ளவர் களுக்கு நாள் ஒன்றுக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது. நடமாடும் உணவகம் மூலமும் உணவு வழங்கப்படுகிறது. பழையார் பாலம் உட னடியாக சீர்செய்யப்படும். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி யாக புத்தகம் வழங்கப்படும். பாதிக்கப் பட்டுள்ள அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்” என்றார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் இருந்த னர்.
கணக்கெடுப்பு பணி
செம்பனார்கோவில் வட்டார பகுதி களான திருக்கடையூர், டி.மணல்மேடு, சீதைசிந்தாமணி, வளையசோழகன் பகுதி களில் சம்பா நடவு செய்யப்பட்டு வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்மை உதவி இயக்குநர் தாமஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செம்ப னார்கோவில் வட்டார பகுதிகள் முழு வதும் வேளாண்மைதுறையின் பிற அலு வலர்களும் நேரில் சென்று பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளதாக இயக்குநர் தாமஸ் தெரி வித்துள்ளார்.