புதுக்கோட்டை, ஜூலை 30 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் உள்ள தீக்கதிர் அரங்கை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் சனிக்கிழமை பார்வையிட்டார். புதுக்கோடடை ஆறாவது புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அங்கு அமைக்கப் பட்டுள்ள புத்தக அரங்குகளைப் பார்வை யிட்டார். அப்போது தீக்கதிர் அரங்கிற்கு வருகை தந்த அமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, கவிஞர் தங்கம்மூர்த்தி, கலை ஞர் தமிழ்ச்சங்கத் தவைவர் த.சந்திர சேகரன், நைனாமுகமது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், துரை.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.