tamilnadu

img

கடந்த முறையை விட இரட்டிப்பு வாக்குகள் வித்தியாசத்தில் சு.வெங்கடேசனை வெற்றிபெறச் செய்வோம்!

மதுரை,மார்ச் 21-  கடந்த முறையை விட இரட்டிப்பான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்க டேசனை வெற்றிபெறச் செய்வோம் என்று வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்க ளவைத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன்  போட்டியிடுகிறார்.   மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பில் வேட்பாளர் சு.வெங்கடேசன் அறி முகக்கூட்டம் தமிழக வணிகவரி-பத்திரப் பதிவுத்துறை அமைச்சரும் திமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான பி. மூர்த்தி தலை மையில் ஆலத்தூர் - கடச்சனேந்தல் சாலை யில் உள்ள மண்டபத்தில் புதன்கிழமையன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அமைச்சர் பி. மூர்த்தி பேசியதாவது: தமிழக முதலமைச்சர்,  அமைச்சர் பெரு மக்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை அழைத்து, கூட்டங்களை நடத்தி கூட்டணிக்கட்சிகள் நிற்கும் தொகுதி கள் உட்பட தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கான களப்பணிகளை நீங்கள் வெற்றிகரமாக செய்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  அந்த வகையில், மதுரையில், வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வ ளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்பது தான் முக்கியம். கடந்த முறை ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அதில் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 34 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளோம்.  தமிழ்நாடு அரசு , கலைஞர் மகளிர் உரி மைத்தொகை என்று பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு எல்லோருக்கும் பலன்கள் கிடைக்க வேண்டும் என்று அனைத்துத்திட்டங்களையும் செயல் படுத்தி வருகிறது. அவற்றை நாம் மக்களி டத்தில் கொண்டு செல்ல வேண்டும்.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகு திகள். அதில் விருதுநகர் நாடாளுமன்ற தொகு திக்கு உட்பட்ட  திருமங்கலம்,

திருப்பரங் குன்றம் சட்டமன்ற தொகுதிகளும்  தேனி நாடா ளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு சோழ வந்தான், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி களும் உள்ளன. நாம் இந்த தொகுதிகளிலும் பணியாற்றி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.  மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சட்ட மன்ற தேர்தலில் 50 ஆயிரம்  வாக்குகள் முன்னிலை பெற்றோம், அதே போல் நாடாளு மன்ற தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற வேண்டும். அதுதான் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு மக்களுக்கு செய்த பணிகளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். இன்னும் ஓராண்டு காலத்தில் இங்கு மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு,  ஒரு தன்னிறைவு பெற்ற சட்டமன்ற தொகுதியாக கிழக்கு சட்டமன்ற தொகுதி இருக்கும். தொகுதியில் உள்ள மாநக ராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்திலும் தமிழக அரசின் நலத் திட்டங்கள் போய்ச்சேர்ந்துள்ளன. எனவே, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். தமிழக அரசு எந்தவொரு தொகு திக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. 

மார்ச் 24 உதயநிதி பிரச்சார துவக்கம்

மார்ச் 24 ஆம் தேதி மதுரையில் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை துவங்குகிறார். மார்ச் 28 ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் பிரச்சாரத்தை துவக்குகிறார்.  சட்டமன்றத் தேர்தல் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில் எப்படி நூறு சதவீத வாக்கு கள் வாங்கி வெற்றி பெற்றோமோ, அதேபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் கிழக்கு தொகுதி யில் நூறு சதவீதம்  வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வேண்டும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படக் கூடிய ஒரு கட்சி.  அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகமும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படக்கூடியது. அந்த அடிப்படையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் சு. வெங்க டேசன் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த முறையை விட  வெற்றி பெறும் வாக்குகள் வித்தியாசத்தை இரட்டிப் பாக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் கூறியுள்ளார். அதைச் செய்து காட்டும் விதத்தில் நம்முடைய பணிகள் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.