இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
இறுதிக்கு முன்னேறுவது யார்?
கிரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது. அதே நேரத்தில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா
இடம் : துபாய் சர்வதேச மைதானம்
நேரம் : மதியம் 2:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)
கருத்துக் கூற ஜனநாயகத்தில் இடமுண்டு பாஜகவுக்கு ஷாமா முகமது பதிலடி
ஞாயிறன்று நடைபெற்ற இந்தியா - நியூஸிலாந்து அணிக்கெதிரான மினி உலகக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே போல பீல்டிங்கில் தட்டு தடுமாறி செயல்பட்டு தன்னை தானே தனது கண்ணாடியை யும் (கூலிங் கிளாஸ்) உடைத்தார். ரோகித் சர்மாவின் இந்த செயல் பாட்டை எடுத்துக்காட்டியும், பாகிஸ் தான் செய்தியாளருக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அளித்த பதிலில், “ரோகித் உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் எடையை குறைக்க வேண்டும். அதேபோல, இந்திய கேப்டன்களில் தகுதியில்லாத கேப்டன் இவர்தான். அவர் ஒரு சாதாரண வீரர். சாதாரண கேப்டன். ஆனாலும் அதிர்ஷ்டத்தால் இந்திய அணியின் கேப்டனாகி விட்டார்” எனக் கூறினார். மகாராஷ்டிராவில் ஒன்றிய அமைச்சர் மகள் பாலியல் வன் கொடுமை சம்பவத்தை திசை திருப்பும் விதமாக பாஜகவினர் ஷாமா முகமது - ரோகித் சர்மா விமர்சன விவ காரத்தை பெரிதாக கிளப்பினர். அதா வது அரசியல் ஆதாய பொருளாக கையிலெடுத்தனர். இந்திய கிரிக்கெட் வாரியமும் ஷாமா முகமதுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தனது பதிவை ஷாமா அகமது தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில் இருந்து நீக்கிவிட்டார்.
பதிலடி
இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறு வனத்துக்கு ஷாமா முகமது அளித்த பேட்டியில், “இது ஒரு விளையாட்டு வீரரின் உடற்தகுதி பற்றிய பொது வான டுவீட் உடல் ரீதியிலாக அவ மானப்படுத்துவதாக இல்லை. ஒரு விளையாட்டு வீரர் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பது எனது எண் ணம். அவர் கொஞ்சம் அதிக எடை கொண்டவர் என்று உணர்ந்தேன், அத னால் நான் அதைப் பற்றி ட்வீட் செய் தேன். ஆனால், என்னை தாக்குகின்ற னர். முந்தைய கேப்டன்களுடன் அவ ரை ஒப்பிட்டுப் பார்த்தபோது, நான் ஒரு டுவீட்டை வெளியிட்டேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? கருத்துக் கூற ஜனநாயகத்தில் இடம் உண்டு” என பாஜகவி