tamilnadu

ரூ. 3500 கோடியை உடனே செலுத்த 6 நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

சென்னை, ஜன. 22 - திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம  வளம் எடுத்து விற்பனை செய்த குவாரி நிறுவனங்கள், 3500 கோடி ரூபாயை உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமவளத்தை எடுத்து விற்பனை செய்து வரும் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அப்போதைய அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி  தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத் திற்கு உதவ, அமிகஸ் க்யூரி ஆக  வழக்கறிஞர் சுரேஷ் நியமிக்கப் பட்டார். இந்த குழுக்கள் பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டன. முடிவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நீதிபதி ஜோதி ராமன் அமர்வில் விசாரணை அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. அதில், முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், 30-க்கும் மேற்பட்ட தாது மணல் ஆலைகள் மூடப்பட்டன. இந்த சூழலில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமவளம் எடுத்து விற்பனை செய்த 6 நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கனிமத்தை எடுத்து விற்பனை செய்ததற்காக மொத்தம் 3500 கோடி ரூபாயை, அரசுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. அதில், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 முதல் 2014 வரை நெல்லை மாவட்டத்தில் 27  லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோத மாக எடுத்ததாகவும், அதற்கான ராயல்டி மற்றும் கனிம வளக் கட்டண மாக ரூ. 2,195 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சட்டவிரோதமாக எடுக்கப் பட்ட மணல் 33.62 லட்சம் டன்  என்று அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  தூத்துக்குடி மாவட்டத்திலும், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனி மங்களுக்கான தொகையை குவாரி உரிமையாளர்களிடம் வசூலிப்ப தற்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப் படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.