tamilnadu

சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளராக மேவை. சண்முகராஜா தேர்வு

சேலம், டிச. 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளராக மேவை. சண்முகராஜா தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட 24-ஆவது மாநாடு, தோழர் டி. சேஷகிரி நினைவு நுழைவு வாயில்- தோழர் என். சங்கரய்யா, தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கத்தில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.  மாநாட்டிற்கு ஆர். வெங்கடபதி, எம். சேது மாதவன், ஆர். வைர மணி, பாக்கியராஜ், எஸ்.  பவித்ரன் ஆகியோர் தலைமை ஏற்றனர். அரசியல்- ஸ்தாபன வேலை அறிக்கையை மாவட்டக்குழு செயலாளர் மேவை. சண்முகராஜா சமர்ப்பித்தார். வரவு - செலவு அறிக்கையை செயற்குழு உறுப்பினர் பொன். ரமணி சமர்ப்பித்தார். புதிய மாவட்டக்குழு தேர்வு 37 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக மேவை.சண்முகராஜா தேர்ந்தெடுக் கப்பட்டார். மத்தியக்குழு உறுப்பி னர் பி. சம்பத், மாநில செயற் குழு உறுப்பினர் செ. முத்துக் கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில  செயற்குழு உறுப்பினர் ப. செல்வசிங் மாநாட்டை நிறை வு செய்து உரையாற்றினார். தீர்மானங்கள் சேலம் மாநகரில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுவட்டப் பாதை மற்றும் நான்கு ரோடு மேம்பா லத்தை புதிய பேருந்து நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்; பெரியார் பல் கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை திரும்ப பெற வேண்டும்; சேலத்தில் ராணுவத் தளவாட மையம் அமைக்க வேண்டும். பன மரத்துப்பட்டி ஏரி மற்றும் கருமந்துறை நாவலூர் நீர்வீழ்ச்சியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்; சேலம் அரசு தலைமை மருத்துவமனை யில் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும்; சொத்துவரி, மின்கட்டணம் உயர்வைக் கைவிட வேண்டும்; மேட்டூர் அனல் மின் நிலையத்தை புனர மைத்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.