அடுத்த பருவ மழைக்குள் அனைத்தும் சீராக்கப்படும் : முதல்வர்
சென்னை, டிச. 31 - சென்னையில் வளிமண்டல மேல டுக்கு சுழற்சி காரணமாக வியாழ னன்று (டிச.30) காலை முதல் லேசான மழை பெய்து வந்தது. பிற்பகல் தொட ங்கி இரவு வரை மிக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென் னை நகர மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் 12 மணியில் இருந்து இரவு (7 மணி) வரை எம்ஆர்சி நகரில் 20 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீ., நந்த னத்தில் 15 செ.மீ., அண்ணா பல்கலைக் கழகத்தில் 12 செ.மீ., மீனம்பாக்கத் தில் 10 செ.மீ., என மழை பதிவானது.
இதனால் சென்னை நகரம் ஸ்தம் பித்தது. தாழ்வான குடியிருப்பு பகுதி களாக உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. விருகம்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய் உள்ளிட்ட கழிவு நீர் கால்வாய்களில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. விருகம்பாக்கம் கால்வாய் வெள்ளம் 100 அடி சாலை யில் வழிந்தோடியதால் அந்தப்பகுதி யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேப்பேரி, தி.நகர், ராயப்பேட்டை, பாரிமுனை, கொளத் தூர், புரசைவாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. 4 சுரங்கப் பாதை களில் தண்ணீர் நிரம்பியது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆனது.
சென்னையின் 145க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் தேங்கி நின் றது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. அத்தகைய இடங்களில மாநகராட்சி சார்பில் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. துரைசாமி சுரங்கப் பாதை, மேட்லி, கெங்குரெட்டி, ரிசர்வ் வங்கி மற்றும் ரெங்கராஜபுரம் சுரங்கப் பாதைகளில் வெள்ளம் அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங் கியது.
நவம்பர் மாதம் முழுவதும் பெய்த கடும் மழையால் சென்னை மக்கள் தத்தளித்து வந்தனர். இந்நிலையில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழை யால் சென்னை நகரம் தத்தளித்தது. இதன்காரணமாக மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் கூடுதலாக்கப் பட்டது.
முதலமைச்சர் ஆய்வு
அரசு நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றிருந்த முதலமைச்சர் நள்ளிரவு சென்னை திரும்பி, நேரடியாக வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய் தார். மழைநீர் தேங்கியுள்ள சில பகுதி களை பார்வையிட்டு விரைந்து அகற்ற உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று (டிச.31) தி.நகர் உள்ளிட்ட பகுதி களை பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானிலை மையமே எதிர்பாராத வகையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. வெள்ள நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற் றும் பணி நடந்து வருகிறது. விரைவில் மழை நீர் முழுவதுமாக அகற்றப் படும். கடந்த 10 ஆண்டுகளாக சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல் அதிமுக அரசு வைத்திருந்தது. அடுத்த பருவமழைக் குள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றார்.
சென்னையில் பெய்த இந்த கன மழையை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, வானிலையை துல்லியமாக கணிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு நினைவுட்டுவோம் என்றும் அவர் கூறினார்.
மேக வெடிப்பு காரணமல்ல!
“மேக வெடிப்பினால் மழை பெய்தால் அதிக நேரம் மழை பெய்யாது. ஆனால் டிச.30 அன்று தொடர்ச்சியாக மழை பெய்தது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே சென்னையில் அதி கனமழை பதிவானது. இதை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல் கள் இருந்தன. கணிப்புகளையும் தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழை யின் அளவு மாறுபடக்கூடும். வானிலையை கணிக்க மேலும் பல இடங்களில் ரேடார் களை பொருத்த வேண்டியுள்ளது. நவீன கருவிகளும் தேவைப்படுகின்றன” என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.