tamilnadu

img

ஆய்வுக்கட்டுரைகள், உரைகள் அடங்கிய தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவிதழ்

பழனி, அக்.19- இந்திய இடதுசாரி இயக்கத்தின் மாபெரும் தலைவராக விளங்கியவ ரும், நவீன இந்தியாவின் மார்க்சியத் தத்துவ அறிஞருமான தோழர் சீத்தா ராம் யெச்சூரியின் நினைவாக, இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாத  ஏடான ‘இளைஞர் முழக்கம்’ நினை விதழ் ஒன்றைத் தயாரித்துள்ளது. 37 படைப்புகளோடு 120 பக்கங்களு டன் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவுகளைத் தாங்கி வெளியாகி யுள்ள இந்த இதழில் தோழர் சீத்தா ராம் குறித்து இந்திய அளவில் எழு தப்பட்ட ஆங்கிலக் கட்டுரைகளின் மொழியாக்கம், கவிதைகள், சீத்தா ராம் யெச்சூரியின் உரைகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அரசியலின் மைய அச்சாக அவர் ஆற்றிய வர லாற்றுப் பணிகள் அடங்கியதாகவும் மற்றும் எதிர்கால அரசியலுக்கான அவ ரின் வழிகாட்டுதலின் தொகுப்பாகவும்  நினைவிதழ் ஒருங்கிணைக்கப்பட்டுள் ளது.  இதனைப் பழனியில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாநிலக்குழு கூட்டத்தில் திண்  டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் வெளியிட இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில  இந்திய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஏ.ஏ. ரஹீம் பெற்றுக்  கொண்டார்.  வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ். கார்த்திக், மாநிலச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் கே.ஆர். பாலாஜி,  மாவட்டச் செயலாளர் கே. முகேஷ், பழனி நகரச் செயலாளர் சுரேஷ் உள்  ளிட்டோர் பங்கேற்றனர். நினைவிதழ் விலை 50 ரூபாய் ஆகும். தேவைக்கு கார்த்திக் 95976 12301, சிங்காரவேலன் 98432 62783,  செல்வராஜ் 82205 54826 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.