tamilnadu

img

ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை,ஜூலை 10- தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி அன்று தடுப்பூசி போடும் பணி  தொடங்கியது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய காலத்தில் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லா ததால் தடுப்பூசி போடும் பணி பின்னடைவில் இருந்தது. பிறகு, அனைத்து அரசுத் தலைமை மருத்து வமனைகளிலும் 24 மணி நேர தடுப்பூசி முகாம், வார இறுதி நாள்களில்  மெகா தடுப்பூசி முகாம் போன்ற திட்டத்தை அரசு கொண்டு வந்தது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் நிறைவு பெற்ற 60 வயதிற்கு மேற்பட்ட முன் களப்பணியா ளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டது. அடுத்தகட்டமாக, பூஸ்டர் டோஸ் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் அதற்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

இதன்படி, மாதம் ஒருமுறை மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவதற்கு திட்ட மிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) தமிழ்நாடு முழுவதும் 31ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களிலும், சென்னையில் மட்டும் 3ஆயிரத்து 300 இடங்களிலும் மெகா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.  ஆனால் மக்களிடம் ஆர்வம் அதிகமாக  இல்லை. இதற்காக அனைத்து மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய  அனைத்து இடங்களிலும் மெகா  தடுப்பூசி சிறப்பு முகாம் அமைப்பதற் காக சுகாதாரத் துறை திட்டமிட்டி ருந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி முனிசிபல் காலனி உயர்நிலைப் பள்ளியில்   போடப்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.