tamilnadu

img

மருத்துவப் படிப்பு: கலந்தாய்வு நாளை துவக்கம்

சென்னை, அக். 17- இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்)  படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கு கிறது என மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்  படிப்புகளுக்கான தரவரிசை பட்டி யலை மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்களன்று(அக்.17) வெளியிட்டார். பின்னர் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,“ 2022-23ஆம் ஆண்டிற்கான மருத்து வம், பல் மருத்துவ படிப்பிற்கு அரசு,  சுயநிதி மருத்துவ இடங்கள், நிர்வாக  மருத்துவ இடங்கள் என மொத்தம்  22,736 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.  இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக் கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 2695, விளையாட்டு பிரிவில் 216, முன்னாள் படைவீரர் பிரிவில் 356 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரி இடங்கள் எம்பிபிஎஸ் 454 இடங்கள், பி.டி.எஸ் கல்லூரியில் 104 இடங்கள் என மொத்தம் 558 இடங் கள் உள்ளன” என்றார். இளநிலை மருத்துவ படிப்புக ளுக்கான கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றே விளையாட்டு, முன்னாள் படை வீரர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று, மாலை சேர்க்கை அனுமதியும் வழங்கப்படும். அக்டோபர் 20ஆம் தேதி அரசு சுயநிதி  கல்லூரிகளில், 7.5 விழுக்காடு இடஒதுக் கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று மாலை 454 எம்.பி.பி.எஸ் மற்றும் 104 பி.டி.எஸ் என 558  இடங்களுக்கான சேர்க்கை அனுமதி யும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அக்டோபர் 25ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான இணைய வழி கலந்தாய்வும்,  21 முதல் 27ஆம் தேதி வரை சுய நிதி ஒதுக்கீட்டிற்கான இணைய வழி கலந்தாய்வும், 27, 28  ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு  பணிகளும் நடைபெறும். மேலும் இள நிலை மருத்துவ படிப்பிற்கான மாண வர்களுக்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்க உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தேவ தர்ஷினி அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில் பயின்று 518 மதிப்பெண்கள்  பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும் இந்த இட ஒதுக்கீட்டில் முதல்  10 இடங்களை பிடித்த மாணவர்க ளுக்கு துறையின் சார்பில் வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இட ஒதுக்கீட்டில் 558 ஏழை, எளிய  மாணவர்கள் மருத்துவ படிப்பை பயில உள்ளனர். இவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பாடங்கள் பதிவிறக்கம் செய் யப்பட்ட மடிக்கணினிகள், கடந்த ஆண்டைப் போலவே அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.