tamilnadu

img

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு! நாமக்கல் மாணவர் முதலிடம்

சென்னை, ஆக. 19 - ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கவுள்ள மருத்து வப் படிப்பு மாணவர் சேர் க்கைக்கான கலந்தாய்வு தர வரிசைப் பட்டியலை அமைச் சர் மா. சுப்பிரமணியம் வெளி யிட்டார்.  இதில், நாமக்கல்லைச் சேர்ந்த  ரஜினிஷ் என்ற மாணவர் 720 மதிப் பெண்களுடன் முதல் இடம் பிடித்துள் ளார். சென்னை அயனப்பாக்கத்தைச் சேர்ந்த சையது, சென்னை சேத்துப் பட்டு மாணவி சைலஜா ஆகியோர் 2 மற்றும் 3-ஆவது இடம் பிடித்துள்ளனர். இதேபோல அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான அரசின் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 669  மதிப்பெண்களைப் பெற்று சென்னை யைச் சேர்ந்த ரூபிகா முதலிடம் பெற்றுள்ளார். காயத்ரி இரண்டாவது இடமும், அனுஷ்யா மூன்றாவது இடமும், ரத்தீஸ் நான்காவது இடமும் பெற்றுள்ளனர். இதையடுத்து, 7.5 சதவீத இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தி னர் மற்றும் விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்புப் பிரிவினருக்கு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதி களில் கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மருத்து வப் படிப்புகளைப் பொறுத்தவரை 9 ஆயி ரத்து 800 எம்பிபிஎஸ், 2150 பிடிஎஸ் மாணவர்களுக் கான இடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்புகளில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு 150 மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  அன்னை மருத்துவக் கல்லூரி யில் 50 மாணவர்களும், கன்னியா குமரியில் உள்ள மெடிக்கல் மிஷன் அண்ட் ரிசர்ச் செண்டர் கல்லூரி யில் 100 மாணவர்களும் என மொத்தம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளது.  இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 அன்று துவங்க உள்ளது. இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்  ஆகும். அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 6 ஆயிரத்து 630 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதனை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.