மே தின எழுச்சி: சிபிஎம், சிஐடியு செங்கொடி ஏற்றி கொண்டாட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 1- உழைக்கும் தொழிலாளர்களின் ஒப்பற்ற தினமான மே தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மே தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் செங்கொடி ஏற்றி உழைப்பாளர்களின் உரிமை முழக்கங்களை எழுப்பி கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அனைத்து ஒன்றியங்கள், புதுக்கோட்டை மாநகரம், அறந்தாங்கி நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சிக் கிளைகளின் சார்பில் மே தினக் கொடி ஏற்றி உழைப்பாளர்களின் உரிமை முழக்கங்களை எழுப்பி கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், ஏ.ராமையன், கே.சண்முகம், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினரக்ள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் அரசுப் போக்கு வரத்துப் பணிமனைகள், மின்வாரிய அலுவலகங்கள், ஆட்டோ நிலையங்கள், நலவாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளில் சிஐடியு சார்பில் தொழிலாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், சிஐடியு மாநில துணைத் தலைவர் எம். ஐடாஹெலன், மாநிலச் செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ். தேவமணி, மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திருவாரூர் சிபிஎம் திருவாரூர் மாவட்ட கட்சி அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் மே தினத்தை முன்னிட்டு, மாவட்டக்குழு சார்பாக, செங்கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய அலுவலகம், கட்சி கிளைகளிலும் மே தின கொடி ஏற்றி எழுச்சியாக கொண்டாடப்பட்டது. கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார், நகரச்செயலாளர் எம்.டி. கேசவராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி. முருகையன் மே தின செங்கொடியை ஏற்றினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, அலுவலக பொறுப்பாளர் கே.கலைமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, பெருளாளர் கே. கஜேந்திரன் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டக்குழு அலுவலகமான தோழர்.கோ. பாரதிமோகன் நினைவகம், தரங்கம்பாடி ஒன்றியம், திருவிளையாட்டம் கிராமத்தில் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் செங்கொடியினை ஏற்றி வைத்து மே தின சிறப்புரையாற்றினார். திருக்கடையூர் தோழர்.ஏ.கே.ஜி நினைவகத்தில் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், டி. மணல்மேடு கிராமத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், செம்பனார்கோவில் ஒன்றியம், ஆக்கூர் மைய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் கொடியினை ஏற்றி வைத்தனர். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி சிவராமன் நினைவிடம் மற்றும் கச்சனம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தெற்கு ஒன்றியச் செயலாளர் டிவி.காரல்மார்க்ஸ், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்துக்குமாரசாமி, நகர செயலாளர் கோபு ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, கேஎன்.முருகானந்தம், கேஜி.ரகுராமன், கேபி.ஜோதிபாசு, ஆகியோர் பங்கேற்றனர். கரூர் ஒன்றியம் புகளூர் சிஐடியு அலுவலகம் முன்பு, மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிஐடியு முன்னாள் மாநிலச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கரூர் ஒன்றிய செயலாளர் பூரணம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஹோசிமின், டிஎன்பிஎல் அரவிந்த், புகளூர் நகர மன்ற உறுப்பினர் இந்துமதி, மாதர் சங்கம் சுமதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். டிஎன்பிஎல் ஆலை வாயில் முன்பு டிஎன்பிஎல் காண்ட்ராக்ட் சங்க செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றினார். கரூர் மாநகரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற மே தின விழாவிற்கு கட்சியின் மாநகர செயலாளர் எம். தண்டபாணி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு செங்கொடியை ஏற்றி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன் தொழிற் சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். சுங்ககேட், அசோக் நகர், தான்தோன்றி மலை, ராயனூர், அரசு போக்குவரத்து கரூர் பணிமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்கம் மற்றும் கட்சி கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.பி.ஜீவானந்தம், பாலசுப்பிரமணியன், ப.சரவணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்டச் செயலாளர் சதீஷ், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், ரெங்கராஜன், கணேசன், ராமசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குளித்தலை குளித்தலை காந்திசிலை முன்பு நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் இரா. முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜு செங்கொடியை ஏற்றி வைத்து பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் சங்கரநாராயணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பிரபாகரன், சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குளித்தலை, வை புதூர், அய்யர்மலை, சத்தியமங்கலம், இரும்பூதிபட்டி, நங்கவரம் உள்ளிட்ட 26 இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது. நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற மே தின கொடியேற்ற நிகழ்ச்சியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பினருமான நாகைமாலி, செங்கொடியை ஏற்றி வைத்தார். சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. வடிவேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. தங்கமணி, சிபிஎம் நகரச் செயலாளர் க. வெங்கடேசன், நகரக் குழு உறுப்பினர் வி.சுந்தர், என். பாபுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக, தமிழ்நாடு சாலையோர விற்பனையாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் மே தின விழா நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் தீன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிஐடியு பொறுப்பாளர் பக்ருதீன் செங்கொடியை ஏற்றி வைத்தார் இதில் நிர்வாகிகள் குமார், ராமசாமி, வி.எஸ். ஆர்.கனி, சௌந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணப்பாறை மணப்பாறையில் மறைந்த மூத்த தோழர் ஜக்கரியா இல்லத்தில் மே தின கொடி ஏற்றப்பட்டது. மூத்த தோழர் ஜக்கரியா இல்லத்தில், அவருடைய பேத்தி ஆசிபா, 139 ஆவது மே தின கொடியை ஏற்றி சிறப்பித்தார். உடன் தாலுகா செயலாளர் கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்டக் குழு உறுப்பினர் நஸ்ரின் பானு, வட்டக் குழு தோழர்கள் உசேன், சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.