மே தினம்: டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசு
சென்னை, மே 1 - தொழிலாளர் தினமான மே 1 அன்று, “டாஸ்மாக் மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபான பார்கள், தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்கள் என அனைத்து விதமான மதுபானக் கூடங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
வெயில் குறையும்; மே 7 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, மே 1 - தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இது மே 7-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், மே 5-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சில இடங்களில் வெயில் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அட்சய திருதியை: ரூ. 12,000 கோடிக்கு தங்கம் விற்பனை
புதுதில்லி, மே 1 - வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையாகி வரும்போதிலும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) வெளி யிட்டுள்ள தகவலின்படி, அட்சய திருதியை நாளில் (ஏப்ரல் 30) மட்டும், இந்தியாவில் சுமார் ரூ. 12 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள், பொருட்கள் விற்பனையாகியுள்ளன.
பத்திரப்பதிவு மூலம் ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்!
சென்னை, மே 1 - அட்சய திருதியை நாளையொட்டி, பத்திரப் பதிவு மூலம் புதனன்று (ஏப்.30) ஒரேநாளில், தமிழக பத்திரப் பதிவுத்துறைக்கு ரூ. 272 கோடியே 87 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அத்துடன் ஒரேநாளில் 27 ஆயிரத்து 440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது..?
சென்னை, மே 1- 2025ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதிக்குள் வெளியிடப் படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல https://results.cbse.nic.in/ என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.