tamilnadu

மே - 20 அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு ரயில் - ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல்!

மே - 20 அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு  ரயில் - ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல்!

தவிச, விதொச, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் அறைகூவல்

சென்னை, மே 5 - தொழிலாளர் உரிமை; தொழிற்சங்க உரிமைகளுக்காக, ‘மே 20’ அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ரயில் மறியல் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு  மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வும் அறிவித்துள்ளன.

கூட்டறிக்கை

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் சாமி. நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்த லிங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் அ. ராதிகா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் ஏ.வி. சிங்காரவேலன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் கோ. அரவிந்தசாமி ஆகியோர் கூட் டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தொழிலாளர் நலன் மற்றும் சமூக  பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி யும், தொழிலாளர் விரோதச் சட்டங் களை நீக்கக் கோரியும் ஒன்றிய தொழிற் சங்கங்கள் சார்பில் 2025 மே 20 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளிகளுக்கு  சாதகமாக மோடி அரசு

ஒன்றிய பாஜக அரசு கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளால் நிரந்தரத் தொழி லாளர்கள் குறைக்கப்பட்டு, ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப்படவும், கார்ப்பரேட் மற்றும் பெரும் நிறு வனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டவும் மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து  வாய்ப்புகளையும் உருவாக்கி தரு கின்றது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர வாக தொழிற்சங்க உரிமைகளை மோடி அரசு முடக்குகிறது.  நாட்டின் பொருளாதாரத்தையும் நாட்டு மக்களையும் சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதக மான- ஒன்றிய மோடி அரசுக்கு எதிராகவும், இதுவரை போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாத்திடவும் மே 20 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்துள்ளன.

தமிழகம் முழுவதும் ரயில் மறியல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட தோழமை அமைப்புக்களும் மே 20 பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. மேற்கண்ட அமைப்புகளின் சார்பில் மே 20 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்திட தீர்மானிக்கப் பட்டுள்ளது.  

விவசாயிகள் தற்கொலை  நாடு முழுவதும் அதிகரிப்பு

இடுபொருட்களின் விலை உயர்வுகளால் வேளாண் உற்பத்தி செலவு தொடர்ந்து அதி கரித்து வருகிறது. பெரும் பகுதி விவசாயிகள் கடனாளி களாகி விட்டனர். ஆட்சிக்கு  வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற மோடி தலைமை யிலான பாஜக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன்  ஐம்பது சதவிகிதம் சேர்த்து விலை நிர்ணயித்திட வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமி நாதன் குழுவின் பரிந்துரையை ஒன்றிய அரசு அமல்படுத்தவில்லை.

 இந்திய விவசாயத்தை  சீரழிக்க முயற்சி

மாறாக, விவசாயிகள் போராட்டங்களுக்கு பணிந்து ஏற்கெனவே ரத்து செய்த - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான - வேளாண் விரோதச் சட்டங்களை மோடி தலைமை யிலான பாஜக அரசு கொல்லைப்புற வழியாக திரும்பவும் கொண்டுவர முயற்சித்து வருகிறது. ‘புதிய வேளாண் சந்தை’ என்ற பெயரில்  நமது நாட்டு விவ சாயத்தை, வேளாண் சந்தைகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்திடும் கொள்கை களை பாஜக அரசு செயல்படுத்துகிறது. அமெரிக்காவிடம் இந்தியா சரணடைகிறது. அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா வந்து தடையற்ற இறக்குமதிக்கு பேசிச் சென்றார். இந்திய விவசாயத்தை, விவசாயிகளை சீரழிக்கும் கொள்கைகளையே ஒன்றிய அரசு அமல்படுத்துகிறது.

 புதிய வேலைவாய்ப்பு  ஏற்பாடுகள் இல்லை

கிராமப்புறங்களில் வேலை நாட்கள் குறைந்து வறுமையும் ஏழ்மையும் அதிகரித்து வரும் சூழலில் தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை பலப்படுத்துவதற்கு பதி லாக நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கி, திட்டத்தையே (MNRGEA) மோடி அரசு சீர்குலைக்கிறது. பணி செய்தவர்களுக்கு பல்லாயிரக்கணக் கான கோடி ரூபாய்களை தர மறுத்து வருகிறது.  இது கிராமப்புறங்களில் ஏழ்மையை அதிகரித்திடச் செய்யும். நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடத்தில் விற்கின்றனர். தேசத்தின் பொதுச்சொத்துக்களை சூறையாடுகின்றனர். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பாஜக ஆட்சியில் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது.  ஒப்பந்தத் தொழி லாளர்களாக- அத்துக்கூலிக்கு- உழைப்புச் சுரண்டலுக்கு மோடி அரசு சட்ட அங்கீகாரம் கொடுக்கிறது.  உதாரணமாக அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான பணியால் நாட்டின் பாதுகாப்புத்துறையே பாதிக்கப் பட்டுள்ளது.  

பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு

ஊதியம் வீழ்ச்சி அடைந்து வருவதால் வறுமை, ஏழ்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை உரு வாக்கிட மோடி அரசு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை பட்ஜெட்டில் குறைத்து கார்ப்பரேட்டுகள், பெரும் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வரிச்சலு கைகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுகிறது.  நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி யாகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ‘நிர்பயா நிதி’ அதிகப்படுத்தப்படவில்லை. சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து  நிறுத்த இதுவரை சிறப்புச் சட்டம் இயற்றப்படவில்லை.

மேலும் மேலும் தனியார்மயமாகும் கல்வி

கல்வி, மேலும் மேலும் தனியார்மயப் படுத்தப்படுகிறது. அரசு கல்வி நிறுவனங் களை பாதுகாத்து, மேம்படுத்திட ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு உதவ மறுக்கின்றது. மாநில உரிமைகளைப் பறித்து தேசிய கல்விக் கொள்கை- 2020ஐ திணிக் கின்றனர். உழைக்கும் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி வகுப்பு வாத அரசியலை முன்னிறுத்தி கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நாட்டில் அமல்படுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, 2025 மே 20 அன்று ரயில் மறியல், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு  நடைபெறும் மறியல் போராட்டத்தில் அனை வரும் பங்கேற்க வேண்டுகிறோம். இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.