tamilnadu

img

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி காங்கேயத்தில் மாபெரும் பேரணி

திருப்பூர், டிச.31 - காங்கேயத்தில் இலவச வீட்டுமனை நிலப் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு பேரணி யாகச் சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.  வெண்மணி தியாகிகள் நினைவு தின இயக்கமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு சார்பில் வீடில்லாத ஏழை-எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை நிலப் பட்டா கோரி மனு கொடுக்கும் இயக்கம் திட்டமிடப்பட்டது.  அதன்படி செவ்வாய்க்கிழமை, காங்கே யம் பேருந்து நிலையம் முன்பு, காங்கேயம் வட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம், நத்தக் காடையூர், நல்லகவுண்டன் வலசு, தொட்டி பாளையம், கரட்டுப்பாளையம், மூத்தம் பாளையம், வெள்ளகோவில் நடேசன் நகர்,  சிவநாதபுரம் உட்பட நகர, கிராமப் புறங்க ளில் இருந்து அணி, அணியாக மக்கள் திரண்டு வந்தனர். இங்கிருந்து பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் குமார சாமி தொடக்கி வைத்தார். காங்கேயம் தாலுகா குழுச் செயலாளர் எம்.கணேசன் தலைமையில் பேரணி தொடங்கியது.  இதில், “வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு  மனைப் பட்டா வழங்க வேண்டும். வீடு கட்டி  பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு  அந்த வீட்டிற்குரிய இலவச பட்டா வழங்க  வேண்டும். வீட்டுமனை இல்லாதவர்களுக்கு அரசின் ஓடை புறம்போக்கு, நத்தம் புறம் போக்கு, மந்தைவெளி புறம்போக்கு உள்ளிட்ட நிலுவையில் உள்ள நிலங்களை வகை மாற்றம் செய்து அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்” என முழக்கங்களை எழுப்பினர். இந்தப் பேரணி காங்கேயம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பாக நிறைவடைந்தது. அங்கு மக்களின் பட்டா கோரிக்கையை வலி யுறுத்தி கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.மூர்த்தி உரையாற்றி னார். இதையடுத்து, காங்கேயம் வட்டாட் சியரிடம் கோரிக்கை மனுக்கள் ஒப்படைக் கப்பட்டன.  இந்த இயக்கத்தில் கட்சியின் தாலுகா  குழு உறுப்பினர்கள் இரா.செல்வராஜ், பி.வேலுச்சாமி, ஆர். வின்சென்ட், பி.கிட்டு சாமி மற்றும் கிளைச் செயலாளர்கள் ஜெ.ராம நாதன், பி.துரைசாமி, வி. லோகேஸ்வரன், எம்.சரவணகுமார், ஏ.பழனிச்சாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். வீட்டுமனை பட்டா கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன. தாலுகா குழு  உறுப்பினர் ப.கருப்புசாமி நன்றி கூறினார். செங்கொடிகளுடன் கிராமப்புற பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் அணிவகுத்த இப்பேரணி, காங்கே யத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நடந்த மிகப்பெரிய பேரணி என்று நகர மக்கள் பேசிக்  கொண்டனர்.