“கம்யூனிஸ்ட் கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க அகில இந்திய மாநாடு சிறந்த வாய்ப்பு” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து இராமநாதபுரத் தில் நடைபெற்ற மாவட்ட வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விரிவான உரையாற்றினார். “ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட் டம் நான் அரசியல் ஊழியராக வளர்ந்த மாவட்டம்.
இந்திய மாணவர் சங்கத் தின் ஒன்று பட்ட முகவை மாவட்ட செய லாளராக பணியாற்றிய காலத்தில் என் பாதங்கள் பதியாத இடங்கள் இல்லை. கட்சியின் அகில இந்திய மாநாடு தமிழ்நாட்டில், அதுவும் நம் அரு காமை மதுரை மாவட்டத்தில் நடை பெறுவது மிகவும் முக்கியத்து வம் வாய்ந்தது. நம் கட்சியின் கோட்பாடுகளையும், தத்துவார்த் தத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு இது ஒரு வாய்ப்பு” என்றார். 1992ஆம் ஆண்டு மாநாட்டின் முக்கி யத்துவத்தை நினைவுகூர்ந்த அவர், “உலக அளவில் கம்யூனிஸ்ட் என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்ட காலத்தில், கம்யூனிஸ்ட் கோட்பாட் டில் தவறில்லை, கம்யூனிச தத்து வார்த்தத்தில் தவறில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு அமைந்தது” என்றார்.
மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பேசிய அவர், மாவட்டத்திலிருந்து 5,000 பேர் ஏப்ரல் 6 பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், 200 செந்தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டார். தீக்கதிர் வாயிலாக மாநாட்டு செய்திகளையும், கட்சியின் வர லாற்றையும் கிளை உறுப்பினர்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்றார். மார்ச் 1 முதல் ஏப்ரல் 10 வரை தீக்கதிர் சந்தா திரட்டும் பணி யும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இலங்கை நிலவரம் குறித்து பேசிய அவர், அங்கு இடதுசாரிக் கட்சி ஆட்சி அமைத்துள்ளதையும், இரு தமிழ் அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மீனவர் பிரச்சனை விரைவில் தீர்க் கப்படும் என இலங்கை அரசு உறு தியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் பாஜக கலவரம் உருவாக்க முயல்வதாக குற்றம் சாட்டிய அவர், மதச்சார்பற்ற கட்சிக ளின் கூட்டத்தின் மூலம் அதனை முறி யடித்ததையும் விளக்கினார். நிறை வாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை, விஜய்க்கு பாதுகாப்பு வழங்கும் விவகாரம், புதிய கல்விக் கொள்கை திணிப்பு உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்தும் விமர்சனம் செய்தார். குறிப்பாக, கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு மறுப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று சாடினார்.
வரவேற்புக்குழு
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர். குருவேல் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் உரை நிகழ்த்தினார். வரவேற்புக்குழுவிற்கு எம்.சிவாஜி தலைவராகவும், ஆர்.குருவேல் செயலாளராகவும், எம்.ராஜ்குமார் பொருளாளராகவும் உள்ளடக்கிய 110 பேர் கொண்ட மாவட்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.காசிநாததுரை, மயில்வாகனன், கருணாகரன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ.3லட்சம் நிதி அகில இந்திய மாநாட்டிற்கான முதற்கட்ட நிதியான ரூ.3லட்சத்தை பெ.சண்முகத்திடம் ஆர்.குருவேல் வழங்கினார்.