tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் மார்ச் 1 முதலே மாணவர் சேர்க்கை  

சென்னை, பிப். 19 - தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்குகிறது.  இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், அனைத்துப் பள்ளித் தலை மை ஆசிரியர்களுக்கு சுற்ற றிக்கை அனுப்பியுள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், “அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரும் அரசுப் பள்ளி களில் சேர்க்கை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தர விட்டுள்ளார்

. பிப்ரவரி 25 -  தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை, பிப். 19 -  தமிழ்நாடு சட்டப்பேர வையின் அடுத்த கூட்டம், மார்ச் 14 அன்று காலை 9.30  மணிக்கு தலைமைச் செய லகத்தில் உள்ள பேரவை  மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை, நிதியமைச் சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இந்நிலையில், பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறவுள்ள முக்கிய  அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை செய்வ தற்காக பிப்ரவரி 25 அன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது.

அதிகமாக  வரி விதிக்கும் இந்தியா : டிரம்ப் பேச்சு

வாஷிங்டன், பிப். 19 -  இந்தியாவில் வாக்க ளிப்போரின் சதவிகிதத்தை அதிகரிக்க, அமெரிக்கா 180 கோடி ரூபாயை வழங்கி வந்த நிலையில், எலான் மஸ்க் தலைமையிலான, அமெரிக்காவின் செயல்திறன் துறை (DOGE),  அந்த நிதியை ரத்து செய்தது. இதனை ‘மனித குல வர லாற்றில் மிகப்பெரிய மோசடி’ என பிரதமர் மோடி யின் பொருளாதார ஆலோச னைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்தி ருந்தார். இந்நிலையில் தான், மக்களிடம் அதிகமாக வரி விதித்து, அதிக பணத்தை வைத்துள்ள இந்தியாவுக்கு நாம் (அமெரிக்கா) ஏன் 180 கோடி ரூபாய் (21 மில்லியன் டாலர்களை) கொடுக்க வேண்டும்? என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுள்ளார்.

தோ்தல் ஆணையா் நியமன வழக்கு: மார்ச் 19-க்கு  ஒத்திவைப்பு புதுதில்லி, பிப். 19 - தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவிலிருந்து, ஒன்றிய பாஜக அரசு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கியதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணையை மார்ச் 19-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.