tamilnadu

img

ஆணாதிக்கத்தோடு மநு ஸ்மிருதியையும் எதிர்க்க வேண்டும்

சென்னை, மார்ச் 8- உலக மகளிர் தின விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  அலுவலகத்தில் அலுவலகக்  கிளை மற்றும் சமூக வலை தளக் குழு சார்பில் புதனன்று  (மார்ச் 8) நடைபெற்றது.  இதில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், “சமூகத்தில் தற்போது நில வும் ஏற்றத்தாழ்வுகள், சாதிய ஒடுக்குமுறைகள் மனித சமூகம் தோன்றிய  காலத்தில் இல்லை. குடும் பத்திற்கு பெண்கள்தான் தலைமை தாங்கியிருக் கிறார்கள். தாய்வழி சமூகம் தான் ஆரம்ப காலத்தில் இருந்தது. அதனால்தான் தாய்மாமன் என அடை யாளப்படுத்தினார்கள்” என்றார். விவசாயத்தை கூட  பெண்கள்தான் துவக்கி னார்கள். ஆனால் அது  நாளடைவில் மாறி ஆணா திக்க சமூகத்தின் சொத்தாக மாறி விட்டது என்றும் அவர் தெரிவித்தார். தனி உடமை, சொத்து போன்ற அம்சங்கள் தோன்றிய பிறகுதான் பெண்கள், ஆண்களுக்கு அடிமை என்ற நிலை உருவானது. இந்தியாவில் வர்ணாஸ்ரம, மநு தர்மம் தோன்றிய பிறகுதான் ஏற்றத்தாழ்வுகள் உருவாகத் தொடங்கியது என்றும் கூறினார். பிறந்தவுடன் தந்தை, பிறகு  சகோதரர், கணவன், மகன்  என காலம் முழுவதும் பெண் களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலைதான் உள்ளது.

ஆண்களுக்கு இணையாக சங்க இலக் கியங்களில் 40க்கும் மேற் பட்ட பெண்கள் இடம் பெற் றிருந்தார்கள். பெண்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாவது மட்டுமல்லாமல்  பாலியல் துன்புறுத்த லுக்கும் உள்ளாக்கப்படு கிறார்கள். பொதுவுடமை சமூகம் அமைந்த இடங்க ளில் ஆணுக்கு பெண் சமம்  என்ற நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது. பொருளா தார ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டுள்ளன. சமூக மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே  ஆணாதிக்கம் ஒழிந்து ஆணுக்கு பெண் சமம் என்ற  நிலை உருவாகும் எனவும் குறிப்பிட்டார். தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், சிறுமிகள் மீதான  பாலியல் வன்கொடுமை களும், தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. அதற்கு காரணம், அந்த கட்சி கடைப்பிடிக்கக் கூடிய மநு  தர்மம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே  ஆணாதிக்கத்தை மட்டும் எதிர்த்தால் போதாது, அதற்கு காரணமான மநு ஸ்மிருதியையும் சேர்த்து எதிர்க்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு நர்மதா தலைமை தாங்கி னார். ராஜலட்சுமி வரவேற் றார். தாரா உறுதிமொழியை வாசித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தனலட்சுமி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் சித்ரகலா ஆகியோரும் பேசினர். தீபா நன்றி கூறினார்.