பாஜகவின் வகுப்பு வாத அரசிய லால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 4 மாத கால மாக கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. மணிப்பூர் வன் முறைக்கு உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 200-ஐ (இதுவரை 180யை தாண்டி யுள்ளது) நெருங்கியுள்ள நிலையில், மணிப்பூரின் இம் பால் பிராந்திய பகுதியான பல்லேலில் கடந்த வெள்ளி யன்று வன்முறை அரங்கே றிய நிலையில், துணை ராணு வப்படைக்கும் ஆயுதம் ஏந் திய கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் உயிரி ழந்தனர். 50 பேர் காயம் அடைந்த நிலையில், மணிப் பூரில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. திசை திருப்பும் பாஜக அரசு பல்லேல் வன்முறையை தொடர்ந்து சனியன்று நடை பெற்ற மணிப்பூர் அமைச்ச ரவை கூட்டத்தில் வன்முறை யை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் உள்ள துணை ராணுவப்படை தேவையில் லாத செயல்களில் ஈடுபடு வதாக கண்டனம் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக ஒன்றிய அரசிடம் புகார் அடிப்படையில் தகவல் தெரி விக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. அதாவது பல் லேல் வன்முறைக்கு துணை ராணுவப்படை காரணம் என பிரச்சனையை மணிப்பூர் பாஜக அரசு திசைதிருப்பும் செயலில் இறங்கியுள்ளது. அசாம் போலீசாரின் நட வடிக்கையை விமர்சித்து மாநில அரசு வழக்கு தொடர் ந்தது என்பது குறிப்பிடத் தக்கது.