tamilnadu

img

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மனிதம் அழிக்கும் சாதி - அ.கரீம்

“நெரிசல் மிகுந்த பயணிகள் ரயி லில் ஏறிய அந்த வெள்ளை நிற மனிதன், இனவாதம் மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு வசவு களை வீசினார். இரண்டு இளம் பெண்களை அவர் தாக்கி னான். இவர்களில் ஒருவர் ஹிஜாப் அணிந்திருந்தார். “இவளைக் கீழே இறக்கிவிடுங் கள்” என்று கத்தினான். “இங்கே அமெரிக்கர்கள் தான் எங்களுக்கு தேவை” என்று அடிக்க பாய்ந்தவனை மூன்று வெள்ளையர்கள் தடுக்க முயற்சி செய்த தற்காக அவர்களை கத்தியால் குத்தினான். “நான் ஒரு தேசபக்தன், என்னால் குத்தப்பட்ட வர்கள் இறந்திருப்பார்கள்  என்று நம்பு கிறேன்” என்று சிறைக்கு செல்லும் வழியில் அந்த  வன்முறையாளன் போலீசிடம் கூறினான். “அந்த மூவரில் ஒருவர்  படுகாயத்துடன் தப்பிக்க இருவர் இறக்கின்றனர்.” இதனை வாசிக்கும்போது இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்படும் இனவெறுப்புக் காட்சிகள், தாக்குதல்கள் நினைவுக்கு வரலாம். இது அமெரிக்காவில் நடந்தது. இப்படி பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.  இன வேற்றுமை தாக்குதல் முன்பைவிட  கூர்மை அடைந்ததற்கான காரண வேரை ஆய்வு செய்யப்போகும்போது அது வந்துசேரும் இடமாக இந்தியாவாக இருக்கிறது என்ற அதிர்ச்சியிலிருந்து  விரிகிறது இசபெல் வில்கெர்சன் எழுதிய “சாதி நமது அதிருப்திகளின் தோற்றுவாய்” என்ற நூல். இதனை மயிலை பாலு  தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஆரிய தத்துவத்தின் தாக்கம் உலகம் முழுக்க எப்படியாக விரிந்துள்ளது என்பதை இன்னும் கூர்மையாக அறிந்து கொள்ள இந்த நூலை வாசிப்பது  உதவியாக இருக்கும். சாதி மனநிலை, அது கட்டமைக்கும் உளவியல் அமெரிக்க நிலத்தில் எம்மாதிரியான விளைவு களை உண்டாக்குகிறது என்பதை வாசிக்க வாசிக்க வாசகன் மீளாத துயரத்துக்குள் ஆழ்கிறான். தனது வாழ்நாளில் செய்த ஆய்வுகளை இசபெல் வில்கெர்சன் இந்நூலில் தொகுத்துள்ளார். தங்களது ரத்த தூய்மையை பாதுகாக்க இந்தியாவில் உள்ள ஆதிக்க உயர் வகுப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளையும், அதற்காக அவர்கள் சாதி அமைப்புக்குள் மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட அகமணமுறையையும்  அமெரிக்க நிலத்திலும் கடைப்பிடித்தால் மட்டுமே நமது ரத்தம் எப்போதும் சுத்தமாக இருக்கும் என்று இனப் புனிதவாதம் பேசும் மெடிசன் கிராண்ட் என்பவர்களின் கருத்து திணிப்பு அமெரிக்காவில் நீண்ட காலமாகவே தொடர்ந்து பலப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் டிரம்ப் ஆட்சிக்கு பிறகு அந்தக் கருத்தின் மீது அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டதை பல தரவுகளுடன் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த ஆரிய கருத்தியலுக்கு எதிரான போரை இந்தியாவில் நடத்திக்கொண்டு இருந்த அம்பேத்கர் 1946-இல் அந் நாளில் நன்கு அறியப்பட்ட ஆப்பிரிக்க - அமெரிக்கரான அறிவுஜீவி டபிள்யு.இ.பி. போயிசை சந்தித்து இரு நாடு களுக்கும் இருக்கும் பொதுவான அம்சங்களை குறித்து உரையாடியதை யும், அதுகுறித்து எழுதிய கடிதங்களின் அம்சங்களை யும் நூல்  பேசுகிறது. “கடவுள் ஏன் என்னை இழிந்த சாதிக்காரனாகப் படைத்தார்? எனது சொந்த நாட்டிலேயே அன்னியனானேன்” என்ற தனது மக்களின் அவலக்குரலை இந்திய கோட்பாட்டுடன் போயிஸ் பொருத்திப்  பார்த்ததை இசபெல் வில்கெர்சன் பதிவு செய்கிறார்.        இந்த நூலை எழுத துவங்குவதற்கு முன்பு இந்தியாவில் சாதி குறித்து எழுதப்பட்ட எல்லா நூல்களையும் ஆழமாக வாசித்தேன். அந்த நூல்களில் இருந்த  சாதி என்ற வார்த்தை எனது நரம்பு மண்டலங்களை தூண்டியது என்று இசபெல் கூறுகிறார் . சாதிகுறித்து எழுதிய எழுத்தாளர்களுக்கு, சமூகவியலாளர்களுக்கு, இவர்களின் பிறப்பால் உண்டாகும் உறவுகளை நான் கண்டறிந்தேன்.  அவர்களின் படைப்புகள் என்னை கடந்த காலத்திற்கு அழைத்து சென்றது. அவர்கள் எதிர்நீச்சல் போட்டிருக்கிறார்கள். நான் தனியாக நடக்கவில்லை. ஏற்கனவே அவர்கள் போட்ட பாதையில் நடக்கிறேன் என்ற உணர்வு இருந்தது என்று இசபெல் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் உலவும் சாதிய வன்மம், இன ஒடுக்குமுறை எவ்வளவு இழிவாகவும் மோசமாகவும் இருக்கிறது என்பதை விரிவாக இந்நூல் பேசுகிறது. எல்லா ஒடுக்குமுறைக்கும் காரணமான ஆரிய தத்துவத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தது இந்தியாதான் என்பதை  வாசிக்கும்போது ஏற்படும் குற்ற உணர்வு மனிதத்தை நேசிக்கும் எல்லோருக்கும் இயல்பாகவே வருவதில் ஆச்சரியமில்லை.  

சாதி நமது 
அதிருப்திகளின் தோற்றுவாய்
ஆங்கிலத்தில்: இசபெல் வில்கெர்சன்
தமிழில்: மயிலைபாலு
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302
பக்கம்: 544   விலை: ரூ.699