tamilnadu

img

மாம்பலம் சாலையோர கடைகளை புல்டோசரை கொண்டு அராஜகமாக அகற்றம்

சென்னை, ஜூலை 20 - மாம்பலம் சாலையில் உள்ள கடைகளை சட்டவிரோதமாக அகற்றி யதை கண்டித்து சனிக்கிழமையன்று (ஜூலை 20) கோடம்பாக்கம் ரயிலடி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 113வது வட்டம், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தையொட்டி மாம்பலம்  நெடுஞ்சாலையில் 50 ஆண்டு களுக்கும் சாலையோர வியாபாரம் நடைபெற்று வருகிறது. முன்னறிவிப் பின்றி ஜூலை 19 அன்று புல்டோ சருடன் வந்த மாநகராட்சி, காவல் துறை அதிகாரிகள் கடைகளை இடித்து தள்ளினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஊழியர் களை அவதூறாக பேசி, கைது செய்வோம் என அதிகாரிகள் மிரட்டினர்.  சிஐடியு உள்ளிட்ட அமைப்புகளின் பெயர் பலகை, கொடி கம்பங்களை யும் இடித்து தள்ளினர். இதில் கடையை இழந்த பெண் வியாபாரி ஒருவர் கூறுகையில், “காய்கறிகளை அள்ளிக் கூட விடாமல் மாநகராட்சி அதிகாரி வித்யா கேவலமாக பேசி, அராஜகமாக நடந்து கொண்டார். புல்டோசரை வைத்து  கடைகளை உடைத்து தள்ளினர். வீட்டின் முன்பு இருந்த ஷெட்டுகளை கழற்றிக் கொள்ள கூட நேரம் தராமல் இடித்து தள்ளினர்.

சந்துக்குள் இருந்த  தள்ளு வண்டியை இழுத்து வந்து சாலை யில் போட்டு அப்பளம் போல் நொறுக்கி  விட்டனர். லைசன்ஸ் உள்ள கடைகளை கூட இடித்துவிட்டனர்”என்றார். இந்த அராஜகத்தை கண்டித்து  மார்க்சிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு  பகுதிச் செயலாளர் வே.இரவீந்திர பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்  ஜி.செல்வா கூறியதாவது: வியாபாரிகளுக்கு முன்அறிவிப்பு செய்யாமல் மாநகராட்சி அதிகாரி வித்யா தலைமையில் வந்த ஊழியர் கள் புல்டோசரை வைத்து கடைகளை இடித்துள்ளனர். மாற்றுத்திறனாளி ஒருவர் நடத்தி வந்த சலவை கடையை அப்பளம் போல் நொறுக்கியுள்ளனர். சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின்படி, நகர விற்பனைக் குழு கூடி முடிவெடுத்த பின், கடைகளை அகற்ற கால அவகாசம் அளித்து வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். மாற்று இடம் கொடுத்து, வியாபாரிகள் செல்ல மறுத்தால்தான் கடைகளை அகற்ற வேண்டும். சென்னை மாநகரத்தில் 35 ஆயிரம்  சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் 975 இடங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இந்த மாம்பலம் நெடுஞ்சாலை யும் ஒன்று. சட்டபடி வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில் அதிகாரி எப்படி கடைகளை அகற்றினார்? நகர விற்பனைக் குழு கூட்டம் நடத்தி முடிவெடுக்காத நிலையில் யார் தூண்டுதலின் பேரில் கடைகள் இடிக்கப்பட்டது? மாநகராட்சி அதிகாரி யின் சட்டவிரோத அராஜகத்தால், தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. அரசியல் சதியோடு சில  அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, சட்டவிரோதமாக செயல்பட்டுள்ள மாநகராட்சி அதிகாரி மீது வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும். கடைகளை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும். இடிக்கப்பட்ட கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதனை செய்ய  மறுத்தால் மாநகராட்சி அலுவல கத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பால சுப்பிரமணியம், எஸ்.வி. வேணு கோபாலன், பகுதிக்குழு உறுப்பினர் கள் த.சுரேந்தர், தி.சிவக்குமார், முறை சாரா சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவல்துறை வழக்கு பதிவு இதனையடுத்து போராட்டம் நடத்திய ஜி.செல்வா உள்ளிட்ட 30 பேர்  மீது பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.