tamilnadu

மதுராந்தகம் சுமைப்பணி தொழிலாளர்கள் கைதுக்கு கண்டனம்

சேலம், பிப்.17- வேலை மறுக்கப்பட்டதால், நியாயம் கேட்ட மதுராந்தகம் கடை வீதி சுமைப்பணி தொழிலாளர் களை கைது செய்த சம்பவத்திற்கு சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் கள் சம்மேளனம் கண்டனம் தெரி வித்துள்ளது.  இதுதொடர்பாக சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சம்மேளன  தலைவர் எஸ்.குண சேகரன், பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடபதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது; செங்கல்பட்டு மாவட்டம்,  மதுராந்தகம் கடை வீதிகளில் கடைகளுக்கு வரும்   அனைத்து வகையான மளிகை பொருட்களையும் இறக்கிடும் பணியினை பல ஆண்டுகாலமாக  50க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் செய்து வருகின்ற னர். இந்த தொழிலாளர்கள்  குடும் பங்களின் வாழ்வாதாரமே இந்த  சுமைப்பணி தான். சமீபத்தில் இங்குள்ள சில கடை வியாபாரி கள் வர்த்தக சங்கத்தின் பெயரில் நீதிமன்றத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து உண்மைக்கும்,  நியாயத்திற்கும் புறம்பாக உத்த ரவைப் பெற்று, திடீரென வேலை தர மறுத்தும், வெளியாட்களை வைத் தும் மூட்டைகளை இறக்கிட செய்துள்ளனர்.  இதனால், ஆவேசமடைந்த பல  ஆண்டு காலமாக பணி செய்து  வரும் தொழிலாளர்கள் தங்கள்  பணியை வேறு ஆட்கள் செய்யக் கூடாது என்று வலியுறுத்திய நிலையில், சுமைப்பணி சங்க  தலைவர் மாசிலாமணி உட்பட  40க்கும் மேற்பட்ட தொழிலாளர் களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  இதையடுத்து மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலை யிட்டு தொழிற்சங்கத் தலைவர்க ளோடு பேச்சுவார்த்தை நடத்தி, வெளியாட்களை வைத்து வேலை செய்யாமல் பார்த்துக் கொள்கி றோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பொறுத் திருங்கள், சுமூகமாக முடிக்கலாம் என்று கூறியுள்ளார்.  ஆகவே, இப்பிரச்சனையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைப் பணி தொழிலாளர்களை உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும். மதுராந்தகம் கடை வீதிகளில் பல ஆண்டு காலமாக பணிசெய்து வரும் சுமைப்பணி தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தை பறிக்கின்ற எத்தகைய நடவடிக்கைகளையும்  செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக மும்,  காவல் துறையும் அனுமதிக்க கூடாது. பல ஆண்டுகளாக தொடர்ந்து பணி செய்துவரும் 50க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் மதுராந்தகம் கடை வீதியில் தொடர்ந்து பணி வழங்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வா கம்  உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.