tamilnadu

img

மதுரையில் தெருவெங்கும் மக்கள் கூட்டம் சமூக இடைவெளி எதிர்பார்த்த அளவில்லை

மதுரை, மே 10- கொரோனா தொற்று பரவலில் மதுரை மாவட்டம் இன்னும் சிவப்பு மண்டலத்தில் தான் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு மேலும் சில தளர்வுகள் என்ற அடிப்படையில் ஏறத் தாழ அவிழ்த்துவிட்டுவிட்டது. இதை யடுதது மதுரை மாநகர் 90 சதவீதம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. ஆட்டோ, பேருந்துகள் மட்டும் தான் ஓடவில்லை. வணிக நிறுவனங்கள் மீண்டும் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கி யுள்ளன. மதுரையில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன போக்குவரத்து சர்வசாதாரணமாக இருந்தது. காளவாசல், கோரிப்பாளை யம் பெரியார் பேருந்து நிலையம் உள் ளிட்ட நகரின் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலும் வாகனப் போக்கு வரத்து அதிகமாக இருந்தது. இது மது ரையின் பழைய நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. கிட்டத்தட்ட ஆறுவாரங்களுக்குப் பின்னர் டீ கடைகள் திங்களன்று திறக் கப்பட்டதால் (பார்சல் மட்டும்) கட்டு மானத் தொழிலாளர்கள், சுமைப்பணித் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்த னர். பலர் வீடுகளிலிருந்தே டீ அருந்து வதற்கான டம்ளர்களை கொண்டு வந்திருந்தனர்.

பல தொழிலாளர்கள் செம்புகளிலும், தூக்கு வாளிகளிலும் டீ, காபி வாங்கிச் சென்றனர். டீ கடை வைத்துள்ள நபர் ஒருவர் கூறுகையில், “ டீ கடைகளைத் திறப் பது உண்மையிலேயே பொருளாதா ரத்தை உயர்த்துவதில் ஒரு முக்கி யப்பங்காற்றும் என்ற அவர், டீ மாஸ்டர், வடை மாஸ்டர்களுக்கு, சப்ளையர் களுக்கு வேலை கிடைக்கும். பால், ஜீனி, டீ தூள், காபி பொடி, சாப்பாட் டிற்கான இலை ஆகியவற்றை வாங்கு வோம். இதன் மூலம் பொருளாதா ரங்கள் முழு வீச்சில் செயல்படத் தொடங் கும்” என்றார். பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு டீ கடை உரிமையாளர் கூறுகையில், “வாடிக்கையாளர் களுக்கு டீ யை பார்சலாக வழங்க பிளாஸ்டிக் கவர்கள் எங்களிடம் இல்லை. திங்களன்று கடைக்கு வந்த வர்களில் ஒரு சிலர் மட்டுமே வீடுகளிலி ருந்து பாத்திரங்கள் கொண்டு வந்த னர்” என்றார். 46 நாட்களுக்குப் பிறகு தனது பேக்கரியைத் திறந்துள்ள ஒருவர் கூறுகையில், “ மக்கள் கடையில் உட் கார்ந்து டீ குடிக்கவோ மற்ற பொருட் களை வாங்கிச் சாப்பிடவோ தான் விரும்புகிறார்கள். பேக்கரிகளில் மக் களை உட்கார நாங்கள் அனுமதிக்க வில்லையென்றால் எதிர்பார்த்த விற் பனை இருக்காது.

பார்சல் ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்காது” என்றார். இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ரிப்பேர் கடைகளுக்கு முன்னால் கூட்டம் காணப்பட்டது. ஏரா ளமானோர் தங்கள் வாகனங்களை “ஸ்டார்ட்” செய்யமுடியவில்லை என் கிறார்கள். வெயில் காலம் தொடங்கி விட்டதால் வாகனங்களின் டயர்கள் பாதிக்கப்படும் டயர், டியூப்களை மாற்ற வேண்டுமென பலர் வந்துள்ள னர் என்கிறார் காளவாசல் பகுதியில் உள்ள டயர் பஞ்சர் கடை உரிமை யாளர். நகைக்கடைகளைப் பொறுத்த மட்டில் மீண்டும் திறப்பது பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக் காது, ஏனெனில் பெரும்பாலானவர் கள் நகைகளில் எந்த முதலீட்டையும் செய்யவேண்டுமென நினைக்க மாட்டார்கள். தங்கள் உடனடித் தேவை களை பூர்த்தி செய்த பின்பே மற்ற வற்றில் முதலீடு செய்வது பற்றி யோசிப்பார்கள்.

போக்குவரத்து கட்டுப்பாடு நகை விற்பனையை பாதிக்கும் என்கிறார்கள் நகைக் கடை வைத்துள்ளவர்கள்.  கொரோனா வைரஸ் பரவல் முழு வதுமாக நீங்கிய பின் நகைக்கடை களை திறப்பது தான் நல்லது. தற் போது கடையைத் திறந்து தொற்று பரவல் அதிகரித்தால் மீண்டும் கடை களை நீண்ட நாட்களுக்கு பூட்ட வேண் டிய சூழல் ஏற்படுமென்கின்றனர் சில நகைக்கடைக்காரர்கள். மதுரையை நகரைச் சுற்றிவந்த போது 95 சதவீதம் பேர் முகக்கவசங் கள் அணிந்திருந்தனர். ஆனால், “சமூக இடைவெளி”- எதிர்பார்த்த அள வில்லை. படம்: ஜெ.பொன்மாறன்