tamilnadu

மதுரை காவல் ஆணையர் மாற்றம்

மதுரை, ஜூலை 1- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் வியாபாரிகள் ஜெய ராஜ், பென்னிக்ஸ் காவல்துறையின் சித்ர வதையால் கொல்லப்பட்டனர். இதை யடுத்து காவல்துறை சார்பு ஆய்வளார், ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 30 காவலர்களும் மாற் றப்பட்டனர். தற்போது காவல்நிலையம் வரு வாய்த்துறையின் பொறுப்பில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் அருண்பாலகோபாலன் அடுத்து தம்மை எங்கே நியமிப்பார்கள் எனத் தெரி யாமல் காத்திருப்போர் பட்டியலில் உள் ளார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர். துணை காவல் கண்காணிப்பாளர்களும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி யாக திருச்சிராப்பள்ளி சரகத்திலுள்ள ஆய் வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் உட்பட சுமார் 80 பேர் மனநல பயிற்சிக்கு அனுப்பி ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் உத்தர விட்டுள்ளார்.

இந்தச் சூழலில் மதுரை மாநகர் காவல் துறை ஆணையராக பொறுப்புவகித்த டேவிட்சன் தேவாசீர்வாதம் சென்னை மாந கர தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஏடிஜிபி ஆக இரவோடு இரவாக மாற்றம் செய்யப்பட் டார். புதிய ஆணையளாராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை பெருநகர தெற்கு சட்டம் ஒழுங்கு காவல்துறை உதவி ஆணையா ளராக பொறுப்பு வகித்துள்ளார். மதுரை டிஐஜி ஆனி விஜயா திருச்சி ராப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஐஜியாக ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை பெரு நகர பூங்கா நகர் துணை கமிஷனராக பொறுப்பு வகித்துள்ளார். கொரோனா பரவல் தமிழகம் முழு வதும் வேகமாக பரவி வரும் நிலையிலும், சாத்தான்குளம் சம்பவம் பொதுமக்களை மட்டுமல்ல, நீதித்துறையே அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ள நிலையில் இந்த மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது.