மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை பேராசிரியர் தாகிர் உசேன் பணியிடை நீக்கம்.
மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை பேராசிரியர் தாகிர் உசேன் என்பவர் மீது 23 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு புகாரளித்த மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கல்லூரி நிர்வாகம் தாகிர் உசைனை பணியிடை நீக்கம் செய்து உத்தவிட்டுள்ளது.