இடைக்காலத் தடை
மதுரை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் சாலை மறியல் போராட்டத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்க 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவராத்திரி விழாவுக்கு அனுமதி
சென்னை: பிப்.26 அன்று ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது. மேலும், கழிவுநீர் மேலாண்மை, ஒலி மாசுவை தவிர்க்க வேண்டுமென ஈஷா யோகா மையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை பின்பற்றிதான் விழா நடத்தப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
ஜாமீன் கோரி எஸ்.ஐ. மனு
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஜாமீன் கோரி எஸ்.ஐ. ராஜா சிங் மனு தாக்கல் செய்தார். ராஜா சிங் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை பிப்.27-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை
சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் புகுத்த முடியாது என்று அமைச்சர் பொன் முடி திட்டவட்டமாக தெரிவித்தார்.
குவாரி கற்களை பதுக்கிய இடத்துக்கு சீல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் துளையா னூரில் சட்டவிரோதமாக 490 டாரஸ் லாரிகளில் குவாரி கற்களை பதுக்கி வைத்திருந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலை அடுத்து ஆய்வு செய்ததில், கற்களை பதுக்கியது தெரிந்தது. இதையடுத்து, ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராசு, ராமையா ஆகி யோரின் குவாரி கற்கள் இருந்த இடத்துக்கு வருவாய் கோட்டாட் சியர் சீல் வைத்தார்.
நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அரசு மருத்துவர் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், அரசு மருத்துவர்கள் நியமனம், வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலில் 2024 ஜூலை 15-க்கு முன் பதிவு செய்யவில்லை எனக் கூறி, நீக்கப் பட்டதாக மருத்துவர் சாய் கணேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்ணீர் திறக்க ஆணை
திருப்பூர்: அமராவதி ஆற்றில் உள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களின் பாசனப் பகுதிகளுக்கு பிப்.25 முதல் மார்ச் 30 வரை 21 நாட்களுக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இத னால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 32770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அரசு சார்பில் மரியாதை
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதாவின் 77 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அன்புமணிக்கு பதிலடி
சென்னை: “எது கோழைத்தனம். வழக்கிற்கு பயந்து ஒன்றிய பாஜக அரசிடம் மண்டியிடுவது தான் கோழைத் தனம். மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி சவால் விடு பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோழை என்ற கூற்றுக்கு அர்த்தம் தெரியாதவர் அன்புமணி. மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் எங்கள் முதல்வர் இரும்பு மனிதர்” என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அன்புமணிக்கு பதிலடி கொடுத்தார்.
தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி யில் பிப்.26 அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் அரசி யல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.