tamilnadu

img

மதுரை மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

மார்க்கெட் கடை வாடகை திடீர் உயர்வு  தூத்துக்குடி மாநகராட்சியை வியாபாரிகள் முற்றுகை

தூத்துக்குடி, ஜூலை 31- தூத்துக்குடி மாநகராட்சி வி.இ ரோட்டில் வ.உ.சி. மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு கடை களை நம்பி 8 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இதுவரை இந்த மார்க் கெட்டை வியாபாரிகள் சங்கம் நிர் வகித்து வந்தது. வாடகை பணத்தை வியாபாரிகள் சங்கம் மாநகராட்சி க்கு செலுத்தி வந்தது. தினம் ரூ. 40 ஆக இருந்த வாடகையை தற்போது வரும் 1 ம் தேதி முதல் ரூ. 400 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு செய்து அதற்கான அறி விப்பு பலகையை மாநகராட்சி அலு வலர்கள் வைக்க வந்துள்ளனர். இதை கண்டித்து 200க்கும் மேற் பட்ட வியாபாரிகள் வெள்ளியன்று மதியம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். வியாபாரிகள் சங்க பொருளா ளர் அன்புராஜ், முன்னாள் எம்எல்ஏ., சி.த.செல்லப்பாண்டியன் ஆகி யோர் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  ஏற்கெனவே வாடகை பணம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலு வையிலுள்ளது. இது வியாபாரி களுக்கு சாதகமாக உள்ள நிலை யில் மாநகராட்சி வேண்டுமென்றே கொரோனா காலத்தில் தங்களை வதைப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.

நெல்லையில் ஆக.3-ம் தேதி முதல் காணொலி காட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி, ஜூலை 31- ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடத்தப்பட்டு வந்த மக்கள் குறைதீர் கூட்டம் கொரோ னா தடுப்புப் பணி காரணமாக தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வரும் ஆக.3 முதல் காணொலிக் காட்சி முறையில் இக்கூட்டம் நடத்த நெல்லை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.  நெல்லை மாவட்ட நிர்வா கத்தின் இணையதளத்தின் முதல் பக்கத்தில் (ஆட்சியரின் காணொ லிக் காட்சி வாயிலான மக்கள் குறைதீர் கூட்டம்) என்பதைத் தெரிவு செய்து கோரிக்கைப் பதிவு என்பதில் தங்களது கோரிக்கை தொடர்பான விவரங்களை அனைத்து நாள்களிலும் எந்த நேரத்திலும் பதிவு செய்யலாம். ஒவ்வொரு திங்கள்கிழமையும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சி யர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே பங்கேற்பர். இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் தங்களது செல்போனில், மாவட்ட நிர்வாக இணையதளத்திற்குள் சென்று காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் என்பதை தெரிவு செய்ய வேண்டும்.  பின்னர் தங்களது பெயர், ஊர் ஆகியவற்றைப் பதிவு செய்து காணொலிக் காட்சிக்குள் நுழைந்து, தங்களது பெயர் குறிப்பிட்டு அழைக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். பெயர் அழைக்கப்படும் போது தங்களது செல்லிடப்பேசியின் வழியாக ஆட்சியருடன் காணொலிக் காட்சி யில் நேரடியாக தங்களது கோரிக்கை தொடர்பான விவ ரங்களை சுருக்கமாகத் தெரியப் படுத்தலாம். அதன்பின்பு தங்களது கோரிக்கை தொடர்பாக சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம் காணொலிக் காட்சி முறையில் விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கடலில் மாயமான மீனவர்களை  மீட்கக் கோரி வழக்கு

 மத்திய உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங் கோடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூலை 24 ஆம் தேதி காலை 5 மீனவர்கள் தேன்காய்பட்டினம் துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். இதன்பின் தேன்காய்பட்டினம் துறைமுகம் அருகே கரை திரும்பிய போது மிகப்பெரிய அலையில் சிக்கிய படகில் இருந்த 5 நபர் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 மீனவர் காப் பாற்றப்பட்ட நிலையில் ஷிப்பு என்பவர் கடலில் மாயமானார். மேலும் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி இரண்டு விபத்துகளில் ஷிப்பு உட்பட 2 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். காணா மல் போன மீனவரை கண்டுபிடிப்பதற்கு விமான படை, கப்பல் படை கொண்டு தேடுதல் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியி ருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி முன்னிலையில் விசார ணைக்கு வந்த போது, வழக்கு குறித்த நிலை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.