tamilnadu

img

மதுரை, திண்டுக்கல் விவசாயத்திற்கு வைகையில் தண்ணீர் திறப்பு

மதுரை:
திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாயத்திற்காக வைகை அணையிலிருந்து திங்களன்று தண்ணீர் திறக்கப் பட்டது. தண்ணீர் திறந்துவிட்ட துணை முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு900 கனஅடி வீதம் திங்கள்கிழமை முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத் தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கன அடியும்,தேனி மாவட்ட குடிநீர்; தேவைக்கு வினாடிக்கு 100 கன அடியும் ஆக மொத்தம் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் ஆக.13-ஆம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452ஏக்கர், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்என்றார்.நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச் சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், தேனி மாவட்டஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ்,சட்டமன்ற உறுப்பினர்கள் பி.நீதிபதி(உசிலம்பட்டி), கே.மாணிக்கம் (சோழவந்தான்), எஸ்.டி.கே.ஜக்கையன்(கம்பம்), பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் எம்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;