சென்னை. பிப், 15- சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு வியாழனன்று (பிப்.15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினர். சட்டப்பேரவையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு கேள்வி எழுப்பி யதை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர், மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி, மோனோ ரயி லுக்குக் கொடி பிடித்தவர்கள் மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு இருந்தாலும், அதை செயல்படுத்துவதற்கு நீங்கள் ஆட்சியில் இருந்தவரை முனைப்புக் காட்டவில்லை. எங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தான், பணி ஆணைகள் வழங்கப்பட்டன; ஒப்பந்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப் பட்டன; அனைத்துப் பணிகளும் தொடங் கப்பட்டன. நான் முதலமைச்சராக பொறுப் பேற்றது முதல், பிரதமரை சந்திக்கும் போதெல் லாம் மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பான கோரிக்கையை வைக்கிறேன். ஆறு நாட்களுக்கு முன்பு கூட பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கான ஒன்றிய அரசின் நிதியை இது வரை தராததால், இந்த முழு தொகையையும் மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனில் இருந்து மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் பாஜகவுடன் கூட்டணி யில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் இப்போதா வது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை. எங்களுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.