tamilnadu

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்குக!

திருப்பூர், நவ.1- தமிழக உள்ளாட்சிகளில் வேலை செய்யும் ஒப்பந்த பணி யாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அரசாணை எண் 2 (டி) 62இன்படி நிர்ணயிக் கப்பட்ட குறைந்தபட்ச ஊதி யத்தை வழங்க சிஐடியு வலி யுறுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தில், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) தொடுத்த வழக்கில் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டபடி, குறைந் தபட்ச ஊதிய அரசாணை 2  (டி),62-ன்படி ஊதியம் வழங்கிட  நகராட்சிகள் நிர்வாக இயக்கு நரிடம் சிஐடியு நிர்வாகிகள் திங்க ளன்று நேரில் வலியுறுத்தினர். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில  செயலாளர்கள் கே.சி.கோபி குமார், கே.ரங்கராஜ்  மற்றும் சம்மேளன பொருளாளர் பாலசுப்ர மணியம் ஆகியோர் நகராட்சி நிர்வாக இயக்குநர், சிவராசு விடம் நேரில் சந்தித்து, இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.  நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர், தமிழ்நாட்டில் உள்ள  மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், அரசாணை 2 (டி) 62இன்படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ண யித்து வழங்கிட உத்தரவு பிறப் பித்தார். அந்த உத்தரவு நகலை யும் சிஐடியு நிர்வாகிகளிடம் வழங்கி உள்ளார்.

தற்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் சட்டப்படி நிர்ணிக்கப்பட்ட குறைந்தபட்ச  ஊதியத்தை விடவும் மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசாணை எண் 2 (டி)62 இன் படி மாநகராட்சிகளில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் மற்றும் டிபிசி ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.725 வழங்க வேண்டும். குடிநீர்  பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் களுக்கு தினக்கூலி ரூ.763 வழங்க வேண்டும். அதேபோல் நகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் மற்றும்  டிபிசி ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.610 வீதமும், குடிநீர்  பணியாளர்கள் மற்றும் ஓட்டு நர்களுக்கு ரூ.687 விதமும் வழங்க  வேண்டும்.பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டிபிசி ஊழியர்களுக்கு ரூ.533 வீதமும், குடிநீர் பணியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ.610 வீதமும் தினக்கூலி வழங்க வேண்டும். இதேபோல் கிராம ஊராட்சி களில் தூய்மை பணியாளர் களுக்கு மாத ஊதியம் ரூ.11 ஆயிரத்து 848, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு நர்களுக்கு (ஓ.எச்.டி ஆப்ரேட்டர்)  ரூ. 13ஆயிரத்து 848 என்றபடி வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி நகராட்சி நிர்வாக இயக்குநர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை மேற்படி அனைத்து உள்ளாட்சி ஒப்பந்த  பணியாளர்களுக்கும் எவ்வித  பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்று சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.