tamilnadu

img

மதச்சார்பற்ற, ஜனநாயக அரசை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைப்போம்

ஈரோடு, அக். 21- பாஜகவையும், வகுப்புவாத சக்திகளையும் தனிமைப்படுத்தி, இந்தியாவில் மதச்சார்பற்ற ஜனநாயக அரசை நிறுவுவதற்கான அடித்த ளத்தை அமைப்பதற்கு போராடுவோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் முழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழுவின் புதுப்பிக்கப் பட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை யில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அலுவலகத்தைத் திறந்து வைத்து பிரகாஷ் காரத் பேசினார்.

கட்சி அலுவலகத்தின் பங்கு    

அப்போது அவர், மாவட்டத்தில் உள்ள உழைப்பாளி மக்கள், விவ சாயிகள், விவசாய தொழிலாளர்கள், தலித் மக்கள், ஆதிவாசி மக்கள், பெண்கள் என அனைத்து மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற் கான வழிகாட்டுதலையும், போராட்டங் களையும் வடிவமைக்கும் களமாக இந்த அலுவலகம் செயல்படும் என் றார்.

கூட்டாட்சி மீதான தாக்குதல்

மேலும் அவர் பேசுகையில், நாள் தோறும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கூட்டாட்சி தத்துவத்தை அழிப்ப தற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் மாநில அரசுகள் செயல்படு வதை மோடி அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும், ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசின் கொள்கைகளை திணிக்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாகவும் விமர்சித்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்

“ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் நாடு முழுவதும் மக்களவைக்கும், சட்ட மன்றங்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது அர சியல் சாசனம் அளித்திருக்கும் கூட்டாட்சி நடைமுறையை அகற்று வதற்கான முயற்சியாகும்” என்றார் அவர்.

பாஜகவின் முந்தைய திட்டங்கள்

ஜம்மு காஷ்மீர் 370 பிரிவை அகற்றுவது, அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் போன்ற திட்டங்களையும் நீண்டகால பிரச்சாரத்திற்குப் பின் நிறைவேற்றியது போல, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டமும் செயல் படுத்தப்படும் எனவும் அவர் எச்சரித் தார்.

பொருளாதார நெருக்கடி

18 முதல் 30 வயதிலான இளைஞர் களில் 25 விழுக்காட்டினர் வேலை யின்றி இருப்பதாக சுட்டிக்காட்டினார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 18% குறைந்தும், இந்தியாவில் எரிபொருள் விலை குறைக்கப்பட வில்லை என்றும், இதனால் அத்தியா வசியப் பொருட்களின் விலையும் பண வீக்கமும் அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார்.

கட்சியின் எதிர்கால திட்டம்

2025 ஏப்ரல் மாதத்தில் மதுரையில் நடைபெறவிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவா தித்து தீர்வுகள் காணப்படும் என்றார். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து, வகுப்புவாத சக்தி களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமையை பெருக்குவதன் மூலமே வகுப்புவாத - கார்ப்பரேட் கூட்டணியை முறியடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். பிரகாஷ் காரத்தின் ஆங்கில உரையை எம்.கிரிஜா தமிழில் மொழி யாக்கம் செய்தார்.