திருச்சிராப்பள்ளி, நவ.10 - சிஐடியு மாநிலக் குழு சிறப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன், டிஆர்இயு தேர்தல் குறித்த அறிக்கை யினை சமர்ப்பித்தார். இதில், டிஆர்இயு செயல் தலைவர் ஜானகிராமன், டிஆர்இயு தேர்தல் பிரச்சாரம் குறித்தும், இந்த பத்தாண்களில் டிஆர்இயு நடத்திய இயக்கங்களின் வெற்றி, சாதனைகள் குறித்தும், சிஐடியு மாநில, மாவட்டக் குழு மற்றும் சிஐடியு-வுடன் இணைக்கப் பட்ட சங்கங்களின் ஆதரவை கோரினார். சிஐடியு மூத்த தலைவரும் டிஆர்இயு கௌரவத் தலைவருமான டி.கே.ரங்கராஜன் பேசுகையில், “பொன்மலை தியாகிகள் வரலாற்றை நினைவு கூர்ந்தார். டிஆர்இயு வெற்றி என்பது இந்திய ரயில்வேயில் மட்டு மல்ல, தமிழக தொழிற்சங்க இயக்கத்திற்கும் மிகப்பெரும் உத்வேகம் ஊட்டும். டிஆர்இயு வெற்றிக்கு சிஐடியு தோழர்கள் பணியாற்றிட வேண்டும்” என்றார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் நிறை வுரை ஆற்றினார். இதில் சிஐடியு மாநிலக் குழு உறுப்பி னர்கள் குமார், திருச்செல்வன், கோபிகுமார், முத்துக்குமார், சந்திரன், ஆறுமுகநயினார், எஸ்.கே.மகேந்திரன், சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.