ஜூலை 9 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!
திண்டுக்கல், மே 17- ஒன்றிய பாஜக அரசானது, ‘தனி யார் மயம்’ என்ற பெயரில், பொதுத் துறை நிறுவனங்களை கபளீகரம் செய்து வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள், ‘வி.ஆர்.எஸ்.’ என்ற பெயரில் தெருவோரத்தில் நிறுத்தப்படு கிறார்கள். இதற்கெதிராக ஜூலை 9 அன்று தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க நாம் களம் காண வேண்டும் என்று திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் வலியுறுத்தினார். சனிக்கிழமை திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ‘பொதுத்துறை, தொழிலா ளர் நலன் பாதுகாப்பு’ கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், பல முக்கிய கருத்துக்களை முன்வைத் தார். பொதுத்துறையை விற்று ஏப்பமிடுவது தான் பணமாக்கலா? “ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் பண மதிப்பிழப்புத் திட்டம் கொண்டு வந்தது. இப்போது ‘பணமாக்கல்’ திட்டம் கொண்டு வந்துள் ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பதும், அவற்றின் பங்குகளை விற்று தின்று செரிப்பதும் தான் இந்த ‘பணமாக்கல்’,” என்று அவர் விமர்சித்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அர வங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குறித்து பேசிய அவர், “1904-ல் பிரிட் டிஷ் அரசால் நிறுவப்பட்ட இத்தொழிற் சாலையில் ஒரு காலத்தில் 3,000 தொழி லாளர்கள் பணிபுரிந்தனர். இந்திய அள வில் அதிக வெடிமருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகளில் 60 சதவிகிதம் ஏற்று மதி செய்யப்படுகிறது. ஆனால், இன்று இத்தொழிற்சாலை யில் வெறும் 600 பேர் மட்டுமே பணிபுரி கின்றனர். அதிக உற்பத்தி தேவைப் படும் நாட்களில் தற்காலிக பணியா ளர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்துக் கொள்கிறோம் என்று அதி காரிகள் தெரிவித்தனர். இந்திய ராணு வத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த லாபகரமான நிறுவனத்தில் 600 பேர் களைக் கொண்டே பழைய அளவு உற் பத்தியை நடத்துகின்றனர். ஆனால் நிரந் தர பணியாளர்கள் நியமிக்கப்படுவ தில்லை. மனித வளம் மறுக்கப்படு கிறது” என்றார். 2ஜி செல்களுக்கு டவர் கிடைக்காத நிலை தொலைத்தொடர்புத் துறை நிலை யை விவரித்த அவர், “மலைக் கிரா மங்களில் 4ஜி பி.எஸ்.என்.எல். டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் 2ஜி அலைவரிசையை மட்டுமே ஏற்கும் சாதாரண செல்போன்களுக்கு டவர் கிடைக்காத நிலை உள்ளது. ஏழை எளிய மக்கள் ரூ.1,000க்கு வாங்கி பயன் படுத்தும் செல்போன்களுக்கு சேவை இல்லை என்றால், மலை கிராம மக் களை 4ஜி செல்போன் வாங்கச் சொல்கி றார்கள். இது அரசின் கொள்கை என்கி றார்கள் அதிகாரிகள்,” என்றார். அரசின் கொள்கைகளால் பி.எஸ்.என்.எல். கபளீகரம் “பி.எஸ்.என்.எல். துறையை படிப்படியாக அழிக்கும் கொள்கையை யே ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. தனியார் நிறுவனங்களை சந்தைப்படுத்தலில் அனுமதித்ததன் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கபளீ கரம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தில் பணிபுரிந்த லட்சக்கணக்கான தொழி லாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெய ரில் வெளியேற்றி தெருவில் நிறுத்தி விட்டது,” என்று குற்றம்சாட்டினார். “சீனாவில் 10ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஆனால் நாம் இன்னும் 4ஜியிலேயே இருக்கிறோம். 5ஜி-ஐக் கூட இன்னும் தாண்டவில்லை,” என் றார். பிரியாணிக் கடையாகும் பிஎஸ்என்எல் சொத்துக்கள் “பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கட்டடங்கள், டவர்கள், ஆப்டிக்கல் பைபர் இணைப்புகள் அனைத்தும் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்நிறுவனத்தின் நிலங்கள் அனை த்தும் வாடகைக்கு விடப்படுகின்றன. திண்டுக்கல் அலுவலகத்தில் கூட ஒரு பகுதி பிரியாணிக் கடைக்கு வாட கைக்கு விடப்பட்டுள்ளது,” என்று தெரி வித்தார். “சென்னையில் உள்ள மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனம் தமிழ்நாடு, கர் நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநி லங்களுக்கான யூரியாவை உற்பத்தி செய்கிறது. கொச்சியில் உள்ள எப்.ஏ. சி.டி. உர நிறுவனம் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உற்பத்தியில் முதலிடத் தில் உள்ளது. விவசாயிகள் பெரிதும் நம்பும் ஸ்பிக், பேக்டம்பாஸ் போன்ற நிறுவனங்கள் பொதுத்துறையில் உள்ளன. இவற்றின் 49 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்ய நிதி ஆயோக் முடிவு செய்துள்ளது. இதை நாம் எதிர்க்கிறோம்,” என்றார். இளைஞர்களைப் பற்றி யோசிக்காத பாஜக “உலகில் கரும்பு உற்பத்தியில் இந் தியா ஐந்தாவது பெரிய நாடாகும். கரும்பின் கழிவான மொலாசிஸிலி ருந்து கூட டி.ஏ.பி. உரத்தை உற்பத்தி செய்ய முடியும் என கண்டுபிடித்துள் ளார்கள். ஆனால் இது குறித்து ஆய்வு செய்யவோ, இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்குவதோ ஒன்றிய அரசின் சிந்தனை யில் இல்லை. மாறாக, பொதுத்துறை நிறுவனங்களை எப்படி தனியார்மய மாக்குவது என்பதில் மட்டுமே கவ னம் செலுத்துகிறது” என்று விமர் சித்தார். வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் “ஒன்றிய அரசின் அனைத்து நிறுவனங்களும் தனியார்மயமாக்கப் பட்டு வருகின்றன. தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப் படுகிறார்கள். எனவே, தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிலாளர்களை பாது காக்கும் பொருட்டும், பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்கும் பொருட்டும் நாடு முழுவதும் ஜூலை 9 அன்று அனைத்து தொழிற்சங்கங்க ளும் வேலைநிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்துள்ளன. இந்த அறை கூவலை ஏற்று வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியுள்ளது. களம் காண வேண்டியுள்ளது,” என்று ஆர். சச்சிதானந்தம் அழைப்பு விடுத் தார். இந்த கருத்தரங்கு திண்டுக்கல் நகர தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறு வோர் சங்கத்தின் சார்பாக நடத்தப் பட்டது. ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார். பெரியசாமி வரவேற்றார். வாஞ்சிநாதன், முபாரக் அலி, ஜான் போர்ஜியா, கௌதமன், முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சேகர், முரளிதரன் ஆகியோர் தீர்மானங் களை முன்மொழிந்தனர். காப்பீட்டு ஊழி யர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஜி.ஆனந்த், ஐ.சி.இ.யு. சங் கத்தின் கோட்டத்தலைவர் என். சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். (ந.நி.)