tamilnadu

img

“அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் சதியை முறியடிப்போம்!”

சென்னை, ஆக.19- “அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மயமா க்கும் பாஜக அரசின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  இது  குறித்து அவர் அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியைக் குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அரசு நிர்வாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இருந்து வந்த தனியார் நிறுவன உயர் அலுவலர்களை அரசின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளாக நியமனம் செய் யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தனியார் துறையில் சிறப்பா கச் செயல்படும் தலைமைச் செயல் அதிகாரிகளை, லேட்ட ரல் என்ட்ரி என்ற பெயரில் நேரடி யாக ஐஏஎஸ் அதிகாரிகளாக நிய மிக்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய் தது. இந்தத்திட்டத்தில் இதுவரை 63 பேரை நியமனம் செய்தது. இதே திட்டத்தின் கீழ் மேலும் 45 பேரை நியமிக்க ஒன்றிய அரசுப்பணியா ளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மை யில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் அப்பட்டமான சட்டமீறல் மட்டுமல்ல, அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் கொடுந் தாக்கு தல் ஆகும். இதன் மூலம் அரசு நிர்வாகம் முழுமையாக ஆர்எஸ் எஸ் பிடியின் கீழ் செல்லும் வகை யில் பாதை அமைக்கும் சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டு வரு வது கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசின் பல்வேறு  அமைச் சகங்களில் உள்ள முக்கிய பதவி களில் லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்பு மூலம் எஸ்.சி, எஸ்.டி,  ஓ.பி.சி.  பிரிவினருக்கான இடஒதுக்கீட் டை ஒன்றிய அரசு வெளிப்படை யாகப் பறிக்கிறது. எனவே, ‘இந் தியா’ கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து போராடி அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.