திருரங்காடி, மே 9- பூரபுழா ஆற்றின் ஆழத்திலிருந்து உயிர் பிழைத்ததில் ஆறுதல் என்பதை விட ஆபத்து ஏற்படுத்திய நடுக்கம் ரஜி ஷாவின் கண்களில் இருந்து விலக வில்லை. மரணத்தையும் மனிதர்களின் உதவியற்ற சூழலையும் நேரில் கண்ட பதற்றத்தில் இருந்து ஷிபினும் விடுபடவில்லை. ஷிபின், அவரது மனைவி ரஜிஷா மற்றும் அவர்களது ஆறு வயது மகள் ஹிதா ஆகியோர் முன்னியூர் கொம்பிளாவில் அரை மணி நேரம் மீட்புக்காக காத்திருந்தனர். நீரின் அடி ஆழத்தில் இருந்து மேலே எழ லைப் ஜாக்கட்தான் அவர்களுக்கு உதவியது. ஷிபின் தன் மகளுக்கும் வேறு சில குழந்தைகளுக்கும் படகில் ஜாக்கெட் எடுத்து கொடுத்துள்ளார். ஷிபி னும் ஜாக்கெட் அணிந்திருந்தார். லைஃப் ஜாக்கெட் அணிந்ததால்தான் காப்பாற்றப்பட்டேன்’ என நிம்மதி யை பகிர்ந்து கொள்கிறார் ரஜிஷா. பய ணத்தை ஆரம்பித்ததும் படகு சிறிது தூரம் சென்றதும் திடீரென திரும்பி யது. என்ன நடந்தது என்று புரிய வில்லை. அனைவரும் ஒரு பக்கமாக சாய்ந்து நகர்ந்தனர். மக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தை கள். அவர்கள் மீது படகு கவிழ்ந்தது. படகில் மோதி ரஜிஷாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. ஷிபினுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இரு வரும் திரூரங்காடி தாலுகா மருத்துவ மனை மற்றும் கோழிக்கோடு மருத்து வக் கல்லூரியில் சிகிச்சை பெற்றனர்.