தஞ்சாவூர், ஏப்.24- இந்திய அரசியல மைப்புச் சட்டத்திற்கு எதி ராகவும் ஆர்எஸ்எஸ், சங்பரி வார் அமைப்புகளின் முகவ ராகவும், தமிழ்நாட்டு மக்க ளின் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டுக் கொண்டு, மார்க்சியத்தை அவதூறாக வும் பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா ளர் முத்து.உத்திராபதி, வடக்கு மாவட்டச் செயலா ளர் மு.அ.பாரதி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோ கரன், கே.பக்கிரிசாமி, சி. ஜெயபால், பி.செந்தில் குமார், என்.வி.கண்ணன், எஸ்.தமிழ் செல்வி, என். சுரேஷ்குமார், கே.அருளர சன், எம்.செல்வம், என்.சிவ குரு, ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன், மாநகர செய லாளர் எம்.வடிவேலன், சிஐ டியு கே.அன்பு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏஐ டியுசி ஆர்.தில்லைவனம், வீர மோகன், ஆர்.செந்தில் குமார், கோ.சக்திவேல், கு. சேவையா, மாவட்ட நிர்வாகி கள் துரை.பன்னீர்செல்வம், ஆர்.கே.செல்வகுமார், ராஜேந்திரன், மாநகரச் செயலாளர் பிரபாகர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயலட்சுமி, கண்ணகி, தாமரைச்செல்வி, சிபிஐ ஒன் றியச் செயலாளர் ஜார்ஜ் துரை, உள்ளிட்ட நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் உடனடியாக கைது செய்து தனியார் திரு மண மண்டபத்திற்கு அழைத் துச் சென்றனர்.