tamilnadu

img

ஆளுநர் வருகையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஆளுநர் வருகையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 18 - தஞ்சாவூருக்கு ஞாயிறன்று (மே 18) மாலை வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஆர்.மனோகரன், சி.ஜெயபால், பி. செந்தில்குமார், என்.சுரேஷ்குமார், கே.அருளரசன், ஆர்.கலைச்செல்வி, என்.சரவணன், கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.வடிவேல், என்.குருசாமி, பிரதீப் ராஜ்குமார், அருணா தேவி, தஞ்சை ஒன்றிய செயலாளர் கோவிந்தராசு, இடது சாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழக மாநில செயலாளர் இராவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.