கணினி யுகமாக மாறிவிட்டாலும் தட்டச்சு தெரிந்தவரால் அதி வேகமாகக் பணிபுரிய முடி கிறது. தட்டச்சராகச் சேரவில்லை என் றாலும், எத்தகைய பணியிடமாக இருந்தாலும், தானே விவரங்களைப் பதிவு செய்து கொள்ள உதவுகிறது. அதுவும் விரைவில், என்பது கூடுதல் தகுதியாக இருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி மற்றும் எஸ்.எஸ்.சி தேர்வுகளில் தட்டச்சர்களுக்கு பணி யிடங்கள் தனியாக உள்ளன. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுகளில் ஒரே மதிப்பெண் வாங்கிய இருவரில் ஒருவர் தட்டச்சு முடித்திருந்ததால் வேலைகிடைத்ததைப் பல முறை பார்க்க முடிந்தது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் இளநிலை உதவி யாளருக்கும், தட்டச்சருக்கும் இடை யிலான கட்-ஆப் 20, 30 மதிப்பெண்கள் வரையில் வேறுபட்டிருந்தது குறிப்பி டத்தக்கதாகும். சில ஆண்டுகளாக கிராக்கியை இழந்திருந்த தட்டச்சுப் பயிற்சி மீண்டும் தனது இடத்தைப் பிடித்து வருகிறது. குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருந்தாலே போதும் என்ற செய்தி பெருமபாலானவர்களுக்குத் தெரியாத செய்தியாகவே இருக்கி றது. எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களில் சிலர் தட்டச்சுப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள தட்டச்சுப் பயிற்சி மையங்களில் உட னடியாக சேருவது நல்லது. மாதம் ரூ.500 முதல் ரூ.700 வரையில் கட்ட ணம் வசூலிக்கிறார்கள்.