குடும்பத்தையே மார்க்சிய இயக்கமாக்கிய பள்ளி ஆசிரியர் தோழர் அறம் நூல் வெளியீட்டு விழாவில் தலைவர்கள் பெருமிதம்
ண்டுக்கல், மே 26- திண்டுக்கல்லில் தீக்கதிர் கட்டு ரையாளர் தோழர் அறம் வளர்த்த நாதன் எழுதிய மொழியாக்க கட்டுரை களின் தொகுப்பு நூல் வெளியிடப் பட்டது. சனிக்கிழமை தீக்கதிர் வாச கர் வட்டம் சார்பாக நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவிற்கு திண்டுக் கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமை வகித்தார். தீக்கதிர் வாசகர் வட்டச் செயலா ளர் க.பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். தீக்கதிர் முன்னாள் ஆசிரி யர் வே.பரமேசுவரன் நூலை வெளி யிட, திண்டுக்கல் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலபாரதி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். நிகழ்வில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி, திண்டுக்கல் இலக்கிய களத்தின் தலைவர் பேரா. முனைவர் ரெ. மனோகரன், செயலாளர் ச.இராம மூர்த்தி, துளிர் நண்பர்கள் இயக்கத் தின் தலைவர் முகமது யூசுப் அன் சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி.ராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் ஆர்.எஸ்.மணி ஏற்புரையில் நன்றி தெரிவித்தார். கே.பாலபாரதி நூலை வெளியிட்டு கே.பால பாரதி உரையாற்றுகையில்,”அறம் வளர்த்த நாதன் என்ற அவரு டைய பெயருக்கேற்ப தனது வாழ்க்கை யை அமைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் நேர்மையாக செயல் பட்டுள்ளார். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்று சொன்னாலும், ஒவ் வொருவரின் பெயரும் மதரீதி யாக வைக்கப்படுகிறது, அழைக்கப் படுகிறது. ஒரு முறை ரயில் பெட்டி யில் ஒருவர் ‘வெண்பா வெண்பா’ என்று தன் குழந்தையை அழைத் தார். மிகவும் அற்புதமான பெயரை அந்த குழந்தையின் தந்தை வைத் துள்ளார். வெண்பா, வெண்ணிலா, தமிழ்செல்வி, பொற்கொடி என தமிழ் பெயர்களை வைத்து அழைக்கிற காலத்திற்கு மக்கள் மாறி வரு கிறார்கள். இது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது. தோழர் அறம் தனது குடும்பத்தின் உறுப்பி னர்களை போராடுகிறவர்களாக வளர்த்தெடுத்திருக்கிறார். பெயருக்கேற்ப அறநெறி வழியில் நடந்து, சமூக நீதிக்காக போராடும் உணர்வை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் சென்றுள்ளார்” என்றார். வே.பரமேசுவரன் தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வே.பரமேசுவரன் உருக்கமான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவர் ஆற்றிய உரையில்,”1952 காலக்கட்டம் அது. தோழர் ஏ.பி, எஸ்.ஏ.டி போன்றவர்கள் இங்கு வாழ்ந்த போது திண்டுக்கல் நகரம் ஒரு போர்ப் பாசறையாக இருந்தது. மாநில அளவிலான விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்றது. அதில் நடிகர் பாலச்சந்திரன், ஜீவா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். தோழர் அறம் இந்த ஊரில் குடியேறினார். அவர் திருநெல்வேலி மாவட்ட த்தைச் சேர்ந்தவர். ஆங்கில நாளி தழ்களில் வந்த கட்டுரைகளை எடுத்துக்கொண்டு தீக்கதிர் அலு வலகத்திற்கு மாலை 6 மணிக்கு வரு வார். தீக்கதிர் ஊழியர்கள் அவரைச் சந்தித்தால் சந்தோஷம் தான், உற்சா கம் தான். எனது 16 வயது மகன் இறந்துவிட்டான். அதனால் எனது மனைவி மனதளவில் பாதிப்படைந்து இருந்தார். தோழர் அறம் எனது வீட்டுக் கதவை தட்டிக்கொண்டே ‘மகளே’ என்று என் மனைவியை பாசத்துடன் அழைப்பார். அரை மணி நேரம் என் மனைவியுடன் பேசு வார். அவருக்கிருந்த துக்கம் எல் லாம் பறந்து போய்விடும். அவர் சிறப்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். திண்டுக்கல் மண்ணில் செங்கொடி இயக்கம் தழைத்தோங்கிய காலம் அது. தோழர்கள் ஏ.பி, எஸ்.ஏ.டி, என்.வி போன்றவர்கள் வெறும் மொச்சைக் கொட்டையும், சுக்குக்காப்பியையும் குடித்துக்கொண்டு இயக்கத்தை வளர்த்தார்கள். மார்க்ஸ் இறக்கும்போது அவர் சிந்திப்பதை நிறுத்திவிட்டதாக ஏங்கெல்ஸ் சொன்னார். தோழர் அறம் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்று நான் சொல்வேன்” என்று உருக்கமாக பேசினார். ஆர்.சச்சிதானந்தம் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி பேசுகையில், “தோழர் அறம் மாண வர்கள் மத்தியில் இடதுசாரி சிந்தனை யை விதைத்தவர். ஆசிரியராக இருந்த காலத்தில் ஹிந்து, பிரண்ட்லைன், சோஷியல் சைன்டி ஸ்ட் போன்ற ஆங்கில ஏடுகளி லிருந்து கட்டுரைகளை எளிய மக்க ளுக்கு புரியும் வகையில் மொழி பெயர்த்துக் கொடுத்துள்ளார். இன்றைய காஷ்மீர் பிரச்சனை குறித்து அன்றே சுர்ஜித் பேசியது தொடர்பான ஆங்கில கட்டுரையை மொழிபெயர்த்துக் கொடுத்துள் ளார். தோழர் ஆர்.எஸ்.மணி இந்த கட்டுரைகளை தொகுத்து அளித்துள் ளது மிகப்பெரிய சாதனை” என்றார். என்.பாண்டி தீக்கதிர் முதன்மை மேலாளர் என்.பாண்டி கூறுகையில், “ஆர் எஸ்எஸ் கும்பல் வரலாறுகளை திருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள தால், நமது வரலாறுகளை ஆவணப்படுத்தும் பணி அவசியம். இந்த புத்தகம் நமது கட்சியின் வரலாற்றை என்றென்றைக்கும் நினைவுபடுத்தும்” என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் டி.ரவீந்திரன் பாராட்டிப் பேசுகையில்,”குடும்பப் பணிகளுக்கு மத்தியிலும் தீக்கதி ருக்கு பங்களித்த தோழர் அறம், தனது குடும்பத்தில் உள்ள அனை வரையும் மார்க்சிஸ்டுகளாக மாற்றி யிருந்தார். அவரது எழுத்துக்கள் அவரது வீட்டு பரணில் பாது காக்கப்பட்டு, இன்று அவரது மகளும் மருமகனும் புத்தகமாக்கி யிருக்கிறார்கள்” என்றார். இந்த நூல் வெளியீடு திண்டுக்கல் மாவட்ட இடதுசாரி இயக்க வரலாற்றில் குறிப் பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.